- Ads -

    கொரோனா: மருத்துவமனையில் இருந்த இளைஞர்! மன உளைச்சலில் தற்கொலை!

    jumb sus

    நாடு முழுவதும் 150 பேர்களுக்கும் மேலாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தனிமைப் படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது தெரிந்ததே.

    இந்த நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து தில்லி வந்த 35 வயது இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அவர் தில்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது

    கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்களுக்கு 14 மருத்துவ கண்காணிப்பில் இருக்கவேண்டும் என்பதும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதன் பின் மீண்டும் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பதும் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்

    இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளைஞர் நேற்றிரவு மருத்துவமனையின் ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகள் மன உளைச்சல் அடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மருத்துவர்கள் மற்றும் உறவினர்களின் பொறுப்பு என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்

    NO COMMENTS

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Exit mobile version