கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, பல்வேறு மாநிலங்களும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதில் பொதுமக்கள் வேறு எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடக்கிவைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டன.
ஊரங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்தாலும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் ந்டமாடத்தான் செய்கின்றனர். அவ்வாறு பயணிக்கும் மக்களுக்கு முறையான இ பாஸ்களை வழங்கி வருகின்றன அரசுகள்.
அவ்வகையில் புதுச்சேரி அரசு தங்கள் மக்கள் மாநில இபாஸ் பெறுவதற்கு http://epass.py.gov.in இல் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
புதுச்சேரி அரசு இந்த இணையதளம் மூலம் #EPASS விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறார்கள். இதன் மூலம் மட்டுமே இனி EPASS வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள்.
திருமணம், இறப்பு, மருத்துவம், பணியில் மீண்டும் சேர, பிர அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம். ID Proof கட்டாயம்… என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.