- அந்தக் குழந்தைகள் அனாதைகள் இல்லை… அவர்களின் பொறுப்பு என்னுடையது… சோனுசூட் மீண்டும் களத்தில் இறங்கினார்.
- பிரபல பாலிவுட் நடிகர் சோனுசூட் மற்றுமொருமுறை தன் நல்ல மனசை வெளிப்படுத்தியுள்ளார்.
- பெற்றோரின் மரணத்தால் அனாதைகளான மூன்று குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதற்கு முன்வந்துள்ளார்.
தெலங்காணா யாதாத்ரி புவனகிரி மாவட்டம் ஆத்மாகூர் மண்டலத்தைச் சேர்ந்த கட்டு சத்தய்யா, 18 மாதங்கள் முன்பு மரணமடைந்தார்.
அவருடைய மனைவி அனுராதா கூட உடல் நிலை சரியின்று நான்கு நாட்கள் முன்பு இறந்து போனதால் அவர்களின் மூன்று குழந்தைகள் மனோகர் (10) லாஸ்யா (7) யஷ்வந்த் (4) அனாதைகளானார்கள்.
இந்த விஷயத்தை கரணம் ரமேஷ் என்பவர் ட்விட்டரில் சோனுசூட் அக்கவுண்டுக்கு ட்வீட் செய்தார்.
அதற்கு உடனடியாக பதில் அளித்த சோனுசூட், அந்த மூன்று குழந்தைகள் அநாதைகள் இல்லை. அவர்களின் பொறுப்பு என்னுடையது என்று ட்விட் செய்துள்ளார்.