இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வரும் ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் திருத்த படுவதாகவும், இதற்காக நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஜனவரி 1 ஆம் தேதி 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க திருத்தம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது.
பெயர் சேர்த்தல் திருத்தல் பணிகள் முடிவுற்று சரிபார்க்கப்பட்டு ஜனவரி 15-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
பெயர் திருத்தம் போன்றவற்றை www.nvsp.com என்ற இணையத்தளத்தில் மேற்கொள்ளலாம்.