1600x960 1509012 tpy

ஏப்ரல் 16-சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம்..

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வருகிற ஏப்ரல் 16-ந்தேதி பிரம்மாண்டமான முறையில் சென்னை தீவுத்திடலில் சீனிவாச திருக்கல்யாணம் நடக்கிறது. நிகழ்ச்சி நடக்கும் இடத்தை திருப்பதி தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி மற்றும் அதிகாரிகள் ஏற்கனவே பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தர்மாரெட்டி கூறிஇருந்ததாவது,

இந்த திருக்கல்யாணத்தில் அதிகளவில் பக்தர்கள் வர வாய்ப்புள்ளது.இதனால், பாதுகாப்பு மற்றும் இதர ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளுடன் விரைவில் கூட்டம் நடத்தப்படும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சாமி, தாயார் உற்சவ மூர்த்திகள், அர்ச்சகர்கள், வேத பண்டிதர்கள், அன்னமாச்சார்யா கலை குழுவினர் மற்றும் இதர துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பில் திருக்கல்யாணம் நடத்தப்படும். 14 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

1600x960 1509012 tpy

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.