மதுரை: மதுரை அழகர்கோயில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஜூன்4-ம் தேதி வைகாசி விசாக நட்தத்திரத்தன்று காலை 11 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷெகம் நடைபெறும் என, கோயில் செயல் அலுவலரும் உதவி ஆணையாளருமான அனிதா தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது: சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினசரி காலை 11 மணிக்கு சண்முக அர்ச்சணையும், மாலை 6 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.
இதேபோல், மதுரை கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோயிலில், வைகாசி வசந்த உற்சவமானது, மே 27-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இதையொட்டி, இக் கோயில் வளாகத்தில் வசந்த உற்சவம், தினசரி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். ஜூன் 1ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை