― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்திருப்பரங்குன்றம் ஆடிப்பூர திருவிழா ரத்து: துணை ஆணையர் அறிவிப்பு!

திருப்பரங்குன்றம் ஆடிப்பூர திருவிழா ரத்து: துணை ஆணையர் அறிவிப்பு!

thirupparankundram murugan

மதுரை: ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடைபெறவிருந்த ஆடிப்பூர விழா ரத்து செய்யப்பட்டது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா நடைபெறும். இதனைத் தொடர்ந்து கோவர்த்தனாம்பிகை வீதிஉலா வருவார்

தற்பொழுது கொரானா வைரஸ் தொற்று ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுவதால் திருக்கோயில் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவில் உள் விழா நிகழ்ச்சியாக நடைபெறும் என கோவில் துணை ஆணையர் மு. ராமசாமி அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து தற்போது கோவில் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நான்கு மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version