வைணவத் தலங்களில் இன்று வைகுந்த ஏகாதசி விழா சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. புகழ்பெற்ற வைணவத் தலமான திருவரங்கத்தில் இன்று காலை 5.30 மணி அளவில் பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மேலும், திருப்பதி திருமலையப்பன் கோவில், சென்னை திருவெல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில், நாங்குநேரி வானமாமலை பெருமான் திருக்கோவில், கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவில், கோவை காரமடை ஸ்ரீரங்கநாதசுவாமி கோவில் உள்ளிட்ட வைணவ தலங்களிலும் பரமபத வாசல் திறப்பு சிறப்பாக நடைபெற்றது.
பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து கோவிந்தா கோவிந்தா, ரெங்கா ரெங்கா என பக்தியுடன் கோஷம் எழுப்பி பெருமாளைத் தரிசித்தனர்.