பேச்சுச் சுதந்திரம் என்றொரு மாயை ! :ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவி ஆயிஷா ரென்னா குடியுரிமை திருத்தச் சட்டப் போராட்டத்தின் மூலம் ஒரே நாளில் உலகறிந்த புரட்சிப் போராளியானார்.
கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயனை விமர்சனம் செய்துவிட்டார் என்பதற்காக மார்க்ஸிஸ்ட் கட்சி உறுப்பினர்கள்
அவரது வீட்டின் முன் திரண்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அவரும் மன்னிப்பு கோரினார்.
இந்த நாட்டில் நீங்கள் பிரதமரை இழிவாக விமர்சிக்கலாம் அது உங்கள் கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம். ஆனால், தோழர் விஜயனை விமர்சனம் செய்வது தேச துரோகம்.
முரண்பட்ட சக்திகள் சேர்ந்து பொது எதிரி என்ற அடிப்படையில் மோடியை எதிர்த்தாலும் சொந்த அடையாளங்களை காப்பாற்றிக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பார்கள் — இது ஒரு உதாரணம்.
- வசந்தன் பெருமாள் (பத்திரிகையாளர்)