ஆனால், அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவருக்கு இரண்டு சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டதாகக் கூறி, டயலாசிஸ் செய்துள்ளனர்.மிகச் சிறிய வயதான ஆனந்த் அனில்வாலுக்கு எப்படி இத்தகைய பாதிப்பு ஏற்படும் என அவரது குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பினர்.
இதையடுத்து, சாதாரண காய்ச்சலுக்கு தனக்கு டயாலிசிஸ் சிகிச்சை செய்து, உடல்நிலையை பாழாக்கிவிட்டதாக, சம்பந்தப்பட்ட இளைஞர் அந்த மருத்துவமனை மீது புகார் எழுப்பியுள்ளார். மேலும் வழக்கு தொடரப் போவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
சாதாரண காய்ச்சலுக்கு சென்ற நபரை சினிமாவில் வருவதுபோல டயாலிசிஸ் செய்த மருத்துவர்களுக்கு கண்டனம் அதிகரித்து வருகிறது.