Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் வளையல் அலங்காரத்தில் பெஜவாடா துர்கம்மா…!

வளையல் அலங்காரத்தில் பெஜவாடா துர்கம்மா…!

bejawada-durgamma2
bejawada durgamma2

கார்த்திகை மாதம் துவிதியை திதியை முன்னிட்டு விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைமீது பல வண்ண வளையல்களால் கனக துர்கா தேவியை அலங்காரம் செய்தார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வளையல்களுக்கு மேலாக ஆலய வளாகம் முழுவதும் அலங்கரிப்பது வழக்கம். ஆனால் இந்த முறை கோவிட் தொற்றுச் சூழலை கவனத்தில் கொண்டு நன்கொடையாக வந்த இரண்டு லட்சம் வளையல்களைக் கொண்டு கோவில் சந்நிதிகளை மட்டுமே அலங்காரம் செய்துள்ளார்கள்.

bejawada durgamma1

இந்த அலங்காரத்திற்காக பெண்கள் வளையல்களை பெருமளவில் எடுத்து வந்தார்கள். வளையல் அலங்காரத்தில் ஜொலிக்கும் அம்மனை தரிசிப்பதற்கு விடியற்காலை 5 மணி முதல் பக்தர்களை அனுமதித்தார்கள். அம்மனுக்கு மஞ்சள் குங்குமம் வளையல்களை சமர்ப்பித்து பூஜை செய்வதற்கு மகளிர் பெருமளவில் வந்தார்கள்.

கார்த்திகை மாதம் தொடங்கியதை முன்னிட்டு இந்திரகீலாத்ரிரி மலை மேல் உள்ள துர்கா மல்லேஸ்வர சுவாமி ஆலயத்திற்கு பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. அம்மனை தரிசிப்பதோடு கூட மல்லேஸ்வர சுவாமியையும் தரிசித்துக்கொண்டு அபிஷேகங்களும் அர்ச்சனைகளும் செய்து வருகிறார்கள்.

bejawada durgamma

கார்த்திகை மாதத்தில் இரண்டாவது நாளான சுக்ல துவிதியை யம துவிதீயையாக, சகோதர துவிதீயையாக அழைக்கப்படுகிறது. கார்த்திகை சுத்த துவிதியை அன்று ஒவ்வொரு சகோதரனும் திருமணமான தன் சகோதரியின் கையால் விருந்து உண்ண வேண்டும் என்று லிங்க புராணம் குறிப்பிடுகிறது.

அதுவே தற்காலத்தில் பஹினீ ஹஸ்த போஜனம் என்ற பெயரில் பழக்கமாக நிலைபெற்றுள்ளது. இந்த நடைமுறை வட இந்தியாவில் மிக அதிக அளவில் உள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version