Home அடடே... அப்படியா? ஆணவமும் – அடக்கமும்

ஆணவமும் – அடக்கமும்

கோவில் யானை ஒன்று நன்றாக குளித்து விட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது.

ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது , பன்றி ஒன்று சேற்றில் குளித்து விட்டு, வாலை ஆட்டிக் கொண்டு எதிரில் வந்தது.

யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி அந்த பன்றி செல்ல வழி விட்டு நின்று கொண்டது.

அந்த பன்றி எதிரே வந்த இன்னொரு பன்றியிடம் , ” பார்த்தாயா , அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது ” என்று சொல்லி சிரித்தது.

அந்த யானையை பார்த்து இன்னொரு யானை , ” நீ அந்த பன்றியை பார்த்து பயந்து விட்டாயா ? ” என்று கேட்டது.

அதற்கு அந்த யானை ” நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து விடக்கூடாதே என்று ஒதுங்கினேன் . நான் ஏறி மிதித்தால் அது துவம்சம் ஆகி விடும். ஆனால், என் கால் அல்லவா சேறாகி விடும் ” என்று கூறியது அடக்கத்துடன்.

நீதி : சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு , நாம் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவதே நல்லது

  • வாரியார் சுவாமிகள்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version