Homeஉள்ளூர் செய்திகள்திருச்சிகரூர்: பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் 64வது அரங்கேற்றம்!

கரூர்: பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் 64வது அரங்கேற்றம்!

-

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில், பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் சார்பில், அரங்கேற்ற விழா நடைபெற்றது. சின்னதாராபுரம் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற, அறுபத்து நான்காவது அரங்கேற்ற விழாவில், அப்பகுதிப் பொதுமக்கள், முதலில் விநாயகர் வழிபாட்டை தொடங்கினர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கோவிலில் இருந்து மேளதாளங்களுடன், ஊர்வலமாக, முளைப்பாரியை எடுத்து வந்தனர். தொடர்ந்து மூத்த கடவுள் விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பின்னர் பவளக்கொடி கும்மியாட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அம்மன் கே விஸ்வநாதன் தலைமையில் அறுபத்து நான்காவது, அரங்கேற்ற நிகழ்ச்சி தொடங்கியது. அரங்கேற்றத்தில், கும்மி அரங்கேற்ற விழா நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் என, ஒரே வண்ணத்திலான பாரம்பரிய உடையணிந்து கலந்துகொண்டு, விநாயகர் மற்றும் முருகன், கருப்பண்ணசாமி, அம்மன் பாடல்கள் உள்பட, பல்வேறு பக்தி பாடல்களுக்கு, கும்மி ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

அரங்கேற்ற நிகழ்ச்சியில், பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் திரளாகக் கலந்துகொண்டு கும்மியாட்டத்தைக் கண்டு ரசித்தனர். இந்த சிறப்பு நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர் அம்மன் விஸ்வநாதன், அருணாச்சலம் ஆகியோரும், பயிற்சி ஆசிரியராக, வெள்ளக்கோவில் சித்ரா ஆகியோரும் சிறப்பான முறையில் பயிற்சிகளை வழங்கினர். செந்தில் , சி எம் மஹால் உரிமையாளர் மயில்சாமி , சிதம்பரம், ரத்னா, ரவி உள்ளிட்டோர் ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version