Homeவீடியோசோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் குருவார பிரதோஷம்!

சோழவந்தான் பிரளயநாத சிவன் கோவிலில் குருவார பிரதோஷம்!

-

சோழவந்தான் பகுதியில் உள்ள சிவாலயங்களில் குருவார பிரதோஷ விழா நடந்தது.சோழவந்தான் பிரளயநாதர் சுவாமி கோவிலில் நடந்த குரு வார பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உள்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவிலில் வலம் வந்தனர். இதைத் தொடர்ந்து பக்தர்கள் சிவ சிவ என்று சிவபுராணம் பாடி வந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடைபெற்றது.

விழாவில் எம்விஎம் குழுமத்தலைவர் மணிமுத்தையா,வார்டு கவுன்சிலர்கள் வள்ளிமையில்,மருதுபாண்டியன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் எம் வி எம் குழுமத்தின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. 

இதே போல், தென்கரை அகிலாண்டஈஸ்வரி அம்மன் சமேத மூல நாதசுவாமி கோவில், திருவேடகம் ஏடக நாதர் சுவாமி கோவில்,பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயம், திருவாலவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் குருவார பிரதோஷ விழா நடந்தது.

இதே போல், மதுரை வைகை காலனி வைகை விநாயகர் கோவிலிலும், மதுரை தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோவிலிலும், மதுரை சாத்தமங்கலம் ஆவின் பால விநாயகர் ஆலயத்திலும், மதுரை அண்ணாநகர் யானைக் குழாய் முத்துமாரியம்மன் ஆலயத்திலும், மதுரை ஜுப்பிலி டவுன் ஞானசக்தி விநாயகர் ஆலயத்திலும், மதுரை தெப்பக்குளம் அருள்மிகு முத்தீஸ்வரன் திருக்கோவிலிலும், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவிலிலும், மதுரை சிம்மக்கல் பழைய சொக்கநாதர், அவனியாபுரம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திலும், குருவார பிரதோஷ விழா கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி, ஏராளமான பக்தர்கள் சிவன் அம்பாளை தரிசித்து சென்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version