கனவு காணாதவர்கள் யாரும் இல்லை. ஏதாவது ஒருநாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கனவுகள் வரும். சில கனவுகள் நம்மை சந்தோஷப்படுத்தும். சில கனவுகள் அச்சுறுத்தும். சில கனவுகள் காரணம் தெரியாமல் குழப்ப வைக்கும். சில கனவுகளை எவ்வளவு முயன்றும் நினைவுக்கு வராது. அவ்வாறு நினைவுக்கு வராத கனவுகளை பற்றி கவலை இல்லை. அது நடக்காது. சில கனவுகள் எச்சரிக்கை ஒலியாகவும், சில கனவுகள் தனலாபத்தை குறிக்கும் விதமாகவும் வருகிறது. சில கனவுகள் சுபகாரியங்கள் நடக்கப் போவதைப் பற்றியும் முன்பே குறிப்புகள் மூலமாக தெளிவுப்படுத்தும். அந்த வகையில் தனலாபம், அதிர்ஷ்ட கனவுகளைப் பற்றி இப்போது பார்க்கப் போகிறோம்.