2021ஆம் ஆண்டுக்கான எச்-1.பி விசா விண்ணப்பம் வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பெறப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்கி வேலை செய்வதற்கு அந்நாட்டு அரசு வழங்கும் எச்-1 பி முக்கியத் தேவை. இந்தியாவைப் பொருத்தவரை ஐ.டி நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்களுக்கு இடையே எச்-1பி விசாவுக்கு வரவேற்பும் போட்டியும் உண்டு.
ஒவ்வொரு நிதி ஆண்டிலும் சுமார் 65 ஆயிரம் எச்-1 பி விசாக்களை அமெரிக்கா வழங்கிவருகிறது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான விசா விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களிடமிருந்து எலக்ட்ரானிக் முறையில் பெற்றுக் கொள்வதற்கான முன்னேற்பாட்டு பணிகள் நிறைவுபெற்றுள்ளதாம். விண்ணப்பக் கட்டணம்- திரும்பப் பெற முடியாத கட்டணமாக 10 டாலர் என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.