Home உலகம் பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம்

பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம்

லண்டன்:

பேஸ்புக் நிறுவனத்துக்கு 122 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் செயலியை கைப்பற்றியது தொடர்பான விவகாரத்தில் பேஸ்புக் நிறுவனத்திற்கு 122 மில்லியன் அபராதம் விதித்தது ஐரோப்பிய யூனியன். இது, இந்திய மதிப்பில் ரூ.773 கோடி ஆகும்.

பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் செயலியை பேஸ்புக் நிறுவனம் கைப்பற்றும் போது தவறான தகவல்களை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக பேஸ்புக் மீது கடந்த 2014 ஆம் ஆண்டு புகார் எழுந்தது.

இதுதொடர்பான புகாரை விசாரித்து வந்த ஐரோப்பிய யூனியன், பேஸ்புக் நிறுவனத்திற்கு அபராதம் விதித்துள்ளது. நிறுவனங்கள் கைப்பற்றப்படும் போது ஏற்படும் போட்டிகள் குறித்து விரிவான தகவல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முறையே வழங்க வேண்டும் என ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் குற்றச்சாட்டு குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், கடந்த 2014 ஆம் ஆண்டு நாங்கள் பதிவு செய்த தகவல்களில் சில தவறுகள் தெரியாமல் நடந்துவிட்டன எனக் கூறியுள்ளது.

 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version