சென்னை லயோலா கல்லூரி கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் சினிமாவிற்கு ஆயிரகணக்கில் செலவு செய்வோர் கிராமிய கலை நிகழ்ச்சிக்கு தங்களால் இயன்றதை அல்லது கொடுக்க நினைக்கும் சிறு தொகையை அல்லது கட்டணமே கொடுக்காமல் கூட இரண்டு நாட்கள் கலை நிகழ்ச்சிகளை காணலாம் என்றும் உணவும் கொடுக்கபடும் என்றும் கிராமிய கலைகள் அழிந்து விடக் கூடாது என்றும் கிராமிய கலைஞர்களை ஊக்குவிக்க நிகழ்ச்சி ஏற்பாடு என்றும் லயோலா கல்லூரியை மெச்சிக் கொண்டும் இரண்டு நாட்களாக வாட்சப்பில் செய்தி பரவியது! பலரும் புளகாங்கிதப் பட்டுக் கொண்டு வாட்சப்பில் பரப்பிக் கொண்டிருந்தார்கள். காரணம் கிராமிய கலைகளை ஆதரித்து நிகழ்ச்சி என்பதால்!
லயோலா கல்லூரி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற அரசு உதவி பெறும் கிறிஸ்தவ மிஷநரி நடத்தும் கல்லூரி~
கிறிஸ்தவ மிஷநரிகள் என்றாலே விஷநரிகள் குள்ள நரிகள் ஆயிற்றே! இவர்களுக்கும் தமிழ்நாட்டு கிராமிய கலைகளுக்கும் என்ன தொடர்பு? ஏன் இந்த நாடகம்? ஏதோ உள்நோக்கத்திலேயே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யபட்டிருக்கும் என்று இந்த செய்தியைக் கண்டபோதே உறுதி செய்து கொண்டேன்!
இதோ மிஷநரிகளின் குள்ளநரித்தனம் வெளிவந்துவிட்டது. கிராமிய கலை நிகழ்ச்சி என்ற பெயரில் இந்து மத விரோதம், இந்து மத இழிவு படுத்தல், மதமாற்றத்திற்கான விதை தூவல், தூண்டில் போடுதல் எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக அரசியல் அதாவது மத்திய அரசின் மீது பொய்யான குற்றசாட்டுகள் இந்து மதத்தின் மீது சேற்றை வாரி இறைக்கும் பதாகைகள் என தங்கள் குள்ள நரித்தனத்தை வெளிபடுத்திவிட்டார்கள் மிஷநரிகள்!
ஆனாலும் சூடு சுரணையற்றவர்கள் எல்லாவற்றையும் மத கண்ணோட்டத்திலேயே பார்ப்பீர்களா என்று நம்மைக் கேள்வி கேட்பார்கள்! மிஷநரிகளும் ஜமாத்துகளும் எதை செய்தாலும் அதில் அவர்களின் கருத்து திணிப்பும் இந்து விரோதமும் நிச்சயமாக இடம்பெறும்! அதைப் புரிந்துகொள்ளாத, அல்லது புரிந்து கொண்டும் உணர மறுக்கும் இந்துக்கள் அவர்கள் அழிவதோடு எதிர்கால சந்ததி அழிவிற்கும் காரணமாகும் அரக்கர்களே!
ஏன் கிறிஸ்தவ சர்ச்சுகளிலும் நிறுவனங்களிலும் இந்துக்களுக்கு எதிரான இந்தியாவிற்கு எதிரான பிரச்சாரம் நடக்கிறது என்பதற்கு இந்த லயோலோ கண்காட்சி படங்களே சாட்சி!
சபரிமலை பெண்ணுரிமை பற்றி கருத்துப் படம்! சரி… நம் கேள்வி இதையே கன்னியாஸ்திரிகள் பாதிக்கப்பட்டதை பற்றி ஏன் சொல்ல வில்லை?
10 சதவீத இடஒதுக்கீடு பற்றி இவர்களுக்கு என்ன பிரச்னை? அத்தனை கருத்துப் படங்களிலும் இந்து மத அடையாளங்களுடன் இருப்பது ஏன்?? நடுநிலையார்கள் விளக்குவீர்களா???