5 ஜனவரி 1666 இல் பிறந்த கோவிந்த் சிங் பத்தாவது சிக்கிய குருவாக போற்றப்படுகிறார்.
ஆன்மீகத் தலைவர், போர்வீரர், கவிஞர், தத்துவஞானி என்று பல தளங்களில் மக்களுக்கு சேவை ஆற்றியுள்ளார். இவருடைய தந்தையார் குரு தேஜ்பகதூர் இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்ததால் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டார் .
ஒன்பது வயது நிரம்பிய குரு கோவிந்த சிங் சீக்கியர்களின் பத்தாவது குருவாக நியமிக்கப்பட்டார். இவர் உயிரோடு இருக்கும்போதே இவருடைய இரண்டு மகன்கள் முகலாயர்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர். மேலும் இரு மகன்கள் போரில் இறந்தனர்.
இவர் 41வது வயதில் 1708 அக்டோபர் 7-இல் இரு இஸ்லாமியர்களால் கொல்லப்பட்டார்.