ஒரே வீட்டுக்குள் ஒரே நேரத்தில் இரண்டு விஷப்பாம்புகள் புகுந்தன. இறுதியில் அவை பிடிபட்டன!
விசாகப்பட்டினம் விசாலாட்சி நகரில் ஒரு வீட்டிற்குள் இரண்டு பாம்புகள் நுழைந்தன. அவற்றுள் ஒன்று நாகப்பாம்பு. இன்னொன்று சாரைப்பாம்பு.
வீட்டிற்குள் பாம்புகளைப் பார்த்ததும் பயத்திற்கு உள்ளான குடும்பத்தினர் உடனே ஸ்நேக் சேவர் சொசைட்டி மெம்பர் ரொக்கம் ரவிகிரணுக்கு போன் செய்தனர்.
அவர் வந்து வீட்டிற்குள் பதுங்கியிருந்த பாம்புகளை வெளியில் இழுத்து சாக்கில் பிடித்து காட்டில் கொண்டு போய் விட்டார். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.