திசா கொலையாளிகளுக்கு சிறையில் முதல்நாள் மட்டன் உணவு கொடுக்கப் பட்டுள்ளது.
பரபரப்பை ஏற்படுத்திய வெடரினரி டாக்டர் கொலை வழக்கின் குற்றவாளிகள் ‘செர்லபல்லி’ சிறையில் உள்ளனர். நால்வரையும் வேறுவேறு சிங்கிள் செல்களில் வைத்துள்ளனர் சிறை அதிகாரிகள். பிற கைதிகளிடம் இருந்து இவர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே இந்தப் பாதுகாப்பு.
சனிக்கிழமை இந்த நால்வரின் மீதும் பிற கைதிகள் தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அதனால்தான் இந்த ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகக் கூறப் படுகிறது. எனவேதான் மற்ற சிறைக் கைதிகளோடு சேராமல் கவனமாக பார்த்துக் கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர் .
சனிக்கிழமையன்று செர்லபல்லி சிறை முன்பு மகிளா சங்கங்களும் பிரஜா சங்கங்களும் போராட்டம் நடத்தின. குற்றவாளிகளுக்கு உடனே கடுமையான தண்டனை அளிக்கும்படி முழக்கம் எழுப்பினர்.
அதேபோல் இரு தெலுங்கு மாநிலங்களிலும் ஞாயிறு இரவு மெழுகுவர்த்தி ஊர்வலமும் கருப்பு ரிப்பன் அணிந்து எதிர்ப்பும் நடத்தப்பட்டன. திங்கள் கிழமை இன்றும் கூட மாணவர்களும் மகிளா சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நான்கு குற்றவாளிகளுக்கும் தாங்களாக தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் இருக்குமோ என்பதை கண்டறிய செவ்வாயன்று கவுன்சிலிங் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள்.
இவர்களில் சென்ன கேசவலுவுக்கு சிறுநீரக கோளாறு பிரச்னை இருப்பதால் அவனுக்கு டயாலிசிஸ் செய்யும் தேவை இருக்கலாம் என்று மருத்துவ வசதி கொடுக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இந்த நால்வரும் இரவு உறங்காமல் கழித்தார்களாம். தாம் செய்த தவறு குறித்து எந்த பச்சாதாபமும் குற்ற உணர்வும் அவர்களிடம் காணப்படவில்லை என்கிறார்கள்.
ஞாயிறன்று காலை டிபனாக புளியோதரை, மதியம் சாப்பாடு (சிறை நிபந்தனைப்படி 250 கிராம்), இரவு உணவில் மட்டன் (சிறை நிபந்தனைப்படி ஞாயிறு மட்டன் உண்டு) அளித்துள்ளார்கள். இரண்டு தடவை டீ குடித்தார்கள்.
இவர்கள் இருக்கும் பாராக் செல்லுக்கு முன்புறம் கதவுக்கு கம்பிகள் பின்பக்கம் 13 அடி உயரத்தில் ஒரு வெண்டிலேட்டர் உள்ளது. ஒரு மூலையில் பாத்ரூம் உள்ளது.