விஜயவாடா இந்திரகீலாத்ரி மலைமீது
கனகதுர்கா சாகம்பரி உத்ஸவம் தொடக்கம்!
விஜயவாடா இந்திரகீலாத்ரி மலை மீது கோவில் கொண்டுள்ள துர்க்கை அம்மன் ஆலயத்தில் சாகம்பரி உற்சவங்கள் தொடங்கின.
வெள்ளிக்கிழமை மேளதாளத்தோடு மங்கள வாத்தியங்களுடன் கொண்டாட்டம் ஆரம்பம் ஆனது. கோவிலையும் அம்மனையும் பலவித காய்கறிகளால் அலங்கரித்தார்கள். மூன்று நாட்கள் சாகம்பரி தேவியாக அம்பாள் தரிசனம் அளிக்கிறாள்.
தினமும் 6000 பேர் பக்தர்கள் அம்மனை தரிசித்து கொள்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளார்கள். கனகதுர்கா தரிசனம் டிக்கெட் ஆன்லைன் மூலம் வழங்கும் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
பக்தர்கள் தலைமுடி சமர்ப்பித்து கொள்வதற்கும் கனகதுர்கா கோவிலில் ஏற்பாடு கள் தொடங்கப்பட்டுவிட்டது. ஒரு மணி நேரத்திற்கு 90 டிக்கெட்டுகள் அதிகாரிகள் விற்கிறார்கள்.
சாகம்பரி தேவி உற்சவ ஏற்பாடுகளை ஆலய ஈவோ எம்வி சுரேஷ்பாபு ஆராய்ந்தார்.
தெர்மல் ஸ்கிரீனிங் செய்தபின் மாஸ்க்குகள் அணிந்தவர்களுக்கு மட்டுமே க்யூ வரிசையில் அனுமதி அளிக்கப்படுகிறது.
சாகம்பரி அலங்காரத்தோடு இந்திரகீலாத்ரி மலை அழகாக காட்சியளிக்கிறது.