ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஆடு ஒன்று விந்தையான குட்டி ஒன்றைப் போட்டது. இது ஊடகங்களில் வைரலானது
அபூர்வமாக சில நேரங்களில் விலங்குகள் ஈனும் குட்டிகள் விகாரமாக அல்லது கால்கள் கைகள் அதிகமாக அல்லது ஒன்றிணைந்து என வித்தியாசமான முறையில் இருப்பது உண்டு. ஆனால் அவை பெரும்பாலும் நீண்ட நாட்கள் உயிருடன் வாழ்ந்ததில்லை.
இப்படி ஒரு வித்தியாசமான அபூர்வமான நிகழ்வாக, ஆட்டுக்கு
மனிதத் தலையும் பன்றியின் உடலுமாக வினோதமான ஒரு விலங்கு பிறந்தது. இது காண்போரை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது
கடப்பா மாவட்டம் வேம்பல்லி அருகில் உள்ள தூபல்லெ கிராமத்தில் பிறந்த இந்த விந்தையான விலக்கினை கிராமத்தார் வந்து ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றார்கள். ஆனால் ஆட்டுக்குப் பிறந்த அந்தக் குட்டி பிறந்த சில மணி நேரங்களுக்குள் இறந்து போனது.