― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாஇந்தியா Vs ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர்; ஓர் அலசல்!

இந்தியா Vs ஆஃப்கானிஸ்தான் டி20 தொடர்; ஓர் அலசல்!

- Advertisement -
ind vs afg

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

          உலகக் கோப்பை டி20 போட்டி வருகின்ற ஜூன் 2024இல் நடக்க உள்ளது. அனத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளும் இதற்கான பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. அந்த வகையில் இந்திய அணியும் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் ஒரு டி20 தொடரை விளையாடி உள்ளது.

          மூன்று டி20 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களையும் இந்திய அணி வென்றது. முதல் ஆட்டம் மொஹாலியில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் ஐந்து விக்கட் இழப்பிறகு 158 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு இந்திய அணி 17.3 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 159 ரன் எடுத்து ஆட்டத்தில் வெற்றி கண்டது. இரண்டாவது ஆட்டம் இந்தூரில் நடந்தது. ஆஃப்கானிஸ்தான் அணி முதலில் ஆடி 20 ஓவரில் 172 ரன் எடுத்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. பதிலுக்கு இந்திய அணி 15.4 ஓவரில் நாலு விக்கட் இழப்பிற்கு 173 ரன் கள் எடுத்து வெற்றி பெற்றது.

          இரண்டு ஆட்டங்களிலும் இளம் வீரர்கள் ஜெய்ஸ்வால், ஷிவம் டுபே ஆகியோரும் பவுலர் அக்சர் படேலும் சிறப்பாக ஆடினர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் டி20 ஆட்டங்களில் ஆட வந்துள்ள ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியும் சரியாக ஆடவில்லை. கோலியாவது கொஞ்சம் ரன் எடுத்தார். ஆனால் ரோஹித் ஷர்மா முதல் ஆட்டத்தில் பூஜ்யம் ரன்னுக்கு ‘ரன் அவுட்’ ஆனார்; இரண்டாவது ஆட்டத்தில் மறுபடியும் பூஜ்யம் ரன்னுக்கு பந்தை விக்கட்டின் மீது ஆடி போல்ட் ஆனார்.

ரோஹித் ஷர்மாவின் அதிரடி

          ஆனால் நேற்று பெங்களூருவில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் ரோஹித் ஷர்மா ஆடிய ஆட்டமே வேறு. டாஸ் வென்று ஆஃப்கானிஸ்தான் அணி இந்திய அணியை பேட் செய்யச் சொன்னது. ரோஹித் ஷர்மாவும் ஜெய்ஸ்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். ரோஹித் ஷர்மா ஒரு தடுமாற்றத்துடன் தொடங்கியதாகத்தான் தோன்றியது. அதற்கேற்றாற்போல மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஜெய்ஸ்வால் நாலு ரன்னிற்கு ஆட்டமிழந்தார்; அடுத்த பந்தில் விராட் கோலி ஆட்டமிழந்தார்; நாலாவது ஓவரின் கடைசிப் பந்தில் டுபே அவுட்டானார்; ஐந்தாவது ஓவரின் மூன்றாவது பந்தில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் ஸ்கோர் 22/4; ரோஹித் ஷர்மா 13 பந்துகள் விளையாடி 8 ரன் எடுத்திருந்தார்.

அடுத்ததாக விளையாட வந்தது ரிங்கு சிங். இவர் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடக்கூடியவர். மீதமுள்ள 14 ஓவர்களையும் நின்று ஆடுவாரா தெரியவில்லை. ரோஹித் ஷர்மாவும் ஃபார்மில் இல்லை; என்ன ஆகுமோ என அனைவரும் எண்ணிய நிலையில் ரோஹித் ஷர்மா இறுதி வரை ஆடி 69 பந்துகளில் 11 ஃபோர், 8 சிக்சர்களுடன் 121 ரன் அடித்தார். இது அவருக்கு டி20இல் ஐந்தாவது சதம். டி20இல் ஐந்து சதமடித்த ஒரே வீரர் இவர்தான். கடைசி 5 ஓவர்களில் ரோஹித்தும் ரிங்குவும் 103 ரன்கள் எடுத்தனர்.

          ரோஹித் தன்னுடைய திறமையை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார். ரிங்கு சிங், தான் ஒரு அதிரடி ஆட்டக்காரர் மட்டுமல்ல, தேவைப்பட்டால் நிதானமாக ஆடி ரன் எடுப்பவர் என்பதை நிரூபித்தார். ஆட்டம் சூப்பர் ஓவர் வரை போனது. முதல் சூபர் ஓவரும் டை ஆனதால், இரண்டாவது சூப்பர் ஓவருக்குப் போனது. முடிவில் இந்திய அணி வெற்றிபெற்றது,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version