சுமார் 300 கூட்டுறவு வங்கிகளை இந்த இடதுசாரிகள் நடத்துகிறார்கள். மேலும், சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாயை, கேரளத்தின் ஏழைகளின் சாதாரண மக்களின் பணம் அதில் போடப்பட்டிருக்கிறது.
இப்போது நீங்களே பாருங்கள் இவர்கள் என்ன செய்தார்கள்? இதை நிர்வாகம் செய்யும் நபர்கள், இந்தப் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பெரியபெரிய சொத்துக்களை வாங்கினார்கள்.
நாங்கள் நடவடிக்கை எடுத்த, இப்போது ஒரு வங்கியிலே, அதிலே நாங்கள் சுமார் 90 கோடி ரூபாயை, பறிமுதல் செய்திருக்கிறோம். இப்போது நாங்கள் சட்ட ஆலோசனையைக் கேட்டிருக்கிறோம்.
இப்போது பறிமுதல் செய்த 90 கோடி ரூபாய், யாருடைய பணம் வங்கியில் இருந்ததோ, இவர்களுக்கு, எப்படி திருப்பிக் கிடைக்கச் செய்யலாம்? நான் ஈடியிடமும் கூட வேண்டுகோள் விடுத்திருக்கிறேன், அதை அளிக்கத் தொடங்குவோமே!!! யார் கொள்ளையடித்தார்களோ… அவர்களுடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்யுங்கள்!!
நாங்கள் இதுவரை, 17,000 கோடி ரூபாயை, எப்படி பறிமுதல் செய்தோமோ, அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு அளித்தோம் 17000 கோடி ரூபாய். ஆகையால் கேரளத்திலே 300 வங்கிகளில் இவர்கள் மோசடி செய்திருக்கிறார்களே, பல நூற்றுக்கணக்கான கோடிகள் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபாய், இது சின்ன ரொக்கமல்ல.
பாதிக்கப்பட்டவர்கள் ஏழைகள். இந்த விஷயத்தை நான் மிகவும் தீவிரமான முறையில் பார்க்கிறேன். எனக்கு இது ஒன்றும் தேர்தலுக்கான விஷயமல்ல. இது சாதாரண மனிதனின் வாழ்க்கை பற்றிய விஷயம்.
- பிரதமர் மோடியின் உரைகள்
தமிழில்: ராமஸ்வாமி சுதர்ஸன்