நிதி முறைகேடுகள், ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் முன்னாள் மத்திய ‘நிதி’ அமைச்சர் ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு கடிதம் எழுதியிருக்கிறார் தீ பயோனியர் பத்திரிகையின் மூத்த பத்திரிகையாளரான ஜே கோபி கிருஷ்ணன் என்பவர்!
இவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் ஆகியோரின் சீனியர் பதவிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்
நளினி சிதம்பரம், ப.சிதம்பரம் இருவருமே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வருமானவரித்துறை அமலாக்கத்துறை சிபிஐ ஆகியவற்றினால், நிதி முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சிக்கிக் கொண்டு கருப்பு பணம் பண மோசடி ஊழல் ஆகியவற்றின் அவர்களுக்கான தொடர்புகள் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ஆனால் அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் நீதிமன்றத்தின் மூலமே தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ள கோபிகிருஷ்ணன், இரண்டு பக்க கடிதத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதியுள்ளார்
அந்தக் கடிதத்தில் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் சிதம்பரத்துக்கும் நளினிக்காகவும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகி அரசியல் பின்னணியுடன் வாதாடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது சீனியர் அட்வகேட் – மூத்த வழக்கறிஞர் என்ற பதவியை தவறாக பயன்படுத்துவதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்
பண மோசடி தடுப்பு விதியின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பதவியை வகித்து தப்பித்துக் கொண்டு இருப்பது நாட்டுக்கு கேடு என்று குறிப்பிட்டுள்ள கோபி கிருஷ்ணன் அவர்கள் இருவரையும் மூத்த வழக்கறிஞர் என்ற நிலையில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.