ஜூன் மாதம் தென் மேற்குப் பருவமழைக் காலம் என்பதால் மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், கோவா உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய இடங்களில் கனமழை பெய்யும். ஆனால் இந்த முறை பருவமழை தாமதமாகவே தொடங்கியது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதை அடுத்து மும்பை பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கும், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.