லட்சக்கணக்கான பக்தர்களின் மத உணர்வுகளை சீர்குலைக்கும் வகையில் மிக மோசமான நாளாக இன்று விடிந்திருக்கிறது. மகான்களுக்கு மதிப்பு செய்யும் நாளான, குரு வாரமான வியாழக்கிழமை இன்று அதிகாலை ஹைதராபாத்-கர்நாடகா பகுதியின் கொப்பல் மாவட்டத்தில் ஆனேகொண்டியில் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ள வியாசராஜரின் பிருந்தாவனம் (நவ பிருந்தாவனம்) இன்று சமூக விரோதிகளால் முற்றிலும் தகர்க்கப் பட்டுள்ளது.
இந்த கோரமான சம்பவம் வியாழக்கிழமையான இன்று, புனித நாளில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. குறிப்பாக, ஆஷாட ஏகாதசி மற்றும் சாதுர்மாஸ்ய சடங்குகளை நடத்தும் மாத்வ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அன்பர்களும், பக்தர்களும் கடுமையான மனவலியுடன் வேதனை அடைந்துள்ளனர்.
பிருந்தாவனத்தை அலங்கரிப்பதற்காக அழகாக அமைக்கப் பட்டிருந்த செதுக்கப்பட்ட கற்களை எல்லாம் உடைத்து, அடியோடு பிடுங்கி எறிந்து, அதன் கட்டமைப்பை சீர்குலையச் செய்து, முழு பிருந்தாவனத்தையும் தோண்டி எடுத்திருக்கிறார்கள்…என்று ஆணேகொண்டி வாழ் பக்தர் கண்ணீர் சிந்தியபடி விவரித்துள்ளார்.
சமூக விரோதிகளின் இந்த மோசமான செயலை அடுத்து, ஆனேகொண்டியைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுதப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பகுதியில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தடுக்க கூடுதல் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சாதுர்மாஸ்ய விரதத்தின் காரணமாக தற்போது வடக்கு கர்நாடகத்தில் உள்ள குல்பர்கா என்ற கலபுரகியில் தங்கியுள்ள சுவாமிகள், தமது மன வருத்தத்தை மாநில அரசுக்கு உணர்த்தியுள்ளார்.
இதனால், நவபிருந்தாவனம் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. துங்கபத்ரா நதியால் சூழப்பட்ட ஆனேகொண்டியில் உள்ள 100 ஏக்கரில் 27.5 ஏக்கர் நிலத்தின் மீது உரிமை கோரி இரு மடத்தின் பக்தர்களும் சட்டப் போரில் ஈடுபட்டிருந்தனர்.
இருப்பினும், பின்னாளில் பக்தர்கள் அதிக அளவில் ஆனேகொண்டிக்கு படையெடுத்தனர். தமிழகத்தில் ஜோதிடப் பத்திரிகைகள், ஆன்மிக இதழ்களில் நவபிருந்தாவனத்தின் சிறப்புகள் குறித்து கடந்த கால் நூற்றாண்டு காலமாக கட்டுரைகள் வெளியாயின. இதனால் உந்தப் பட்ட தமிழக பக்தர்களும் பெருமளவில் ஆனேகொண்டிக்கு சென்று வந்து கொண்டிருந்தனர். பலரது இல்லங்களில் நவ பிருந்தாவன படம் அலங்கரிக்கிறது. குறிப்பாக வியாழக்கிழமை நவபிருந்தாவனத்தை தரிசித்து விட்டு, வியாசராஜரை மனத்தால் தொழுது சென்றால் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும், நன்மைகள் நடக்கும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உண்டு.
இந்த நிலையில், நவபிருந்தாவனம் சிதைக்கப் பட்டிருப்பது, தமிழகத்தில் உள்ள பக்தர்களின் மனங்களிலும் ரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாலிகாஃபூர், ஔரங்கசீப், கில்ஜி ஆட்சி கால கொடூரங்களில் ஒன்றாக ஹிந்து தேசியவாதியின் ஆட்சியின் போதே இன்றும் அரங்கேற்றப்படுகிறது. 800 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தர்மநெறிகளைக் காத்தருளி பிருந்தாவனமான மஹான் வியாசராஜர் மூல பிருந்தாவனம் கயவர்களால் முற்றிலும் இடிக்கப்பட்டதை கண்டு நெஞ்சம் பதறுகிறது.
கர்நாடக மாநிலம் ஆனேகுந்தியில் உள்ள நவ பிருந்தாவனம் உள்ள ஸ்ரீ வியாசராஜரின் மூல பிருந்தாவனம் நேற்றிரவு கயவர்களால் முற்றிலும் இடிக்கபட்டது. இன்று காலை வழக்கம் போல் பூஜை செய்ய படகில் வந்த பூஜாரிகள் அதைக் கண்டு மிக அதிர்ச்சி அடைந்தனர்.
ஹிந்து தேசியவாதியின் ஆட்சி நடைபெறும் போதே வழிபாட்டு தலம் இடிக்கப் படுகிறதென்றால், அரக்கா்களின் வஞ்சக திட்டத்தை நினைத்து பார்க்க முடியவில்லை. முதுகெலும்பற்ற நடுநிலை முட்டாள்களால் இன்னும் என்னென்ன நேருமோ.. நரசிம்மனாய் வந்து காத்தருள வேண்டும் இறைவா!- என்று கெஞ்சி இறைஞ்சி வேண்டுகின்றனர் பக்தர்கள்!
தà¯à®²à¯à®•à¯à®•à®©à¯à®•à®³à¯à®•à¯à®•à¯ கையடிசà¯à®šà®¿ விடà¯à®± பனà¯à®©à®¿à®• இரà¯à®•à¯à®•à®¿à®±à®µà®°à¯ˆ இத௠தொடரà¯à®®à¯
மிலிடà¯à®Ÿà®°à®¿ government vanthu naan leader aana olichi kattivideuvane.