பராசர விஜயம்
(By Sri APNSwami)
மஹரிஷி வசிஷ்டரின் பிள்ளையின் பிள்ளை (பேரன்) பராசரமஹரிஷி. இவரே வேத வ்யாஸ்ரின் தந்தை. புராணங்களில் ரத்னமான ஸ்ரீவிஷ்ணுபுராணத்தை இயற்றிய மகாத்மா இவரேயாவர். சுவாமி ஆளவந்தார் இயற்றிய ஸ்தோத்ர ரத்நம் எனும் நூலில் புராண ரத்னம் இயற்றிய மகரிஷி ரத்நமான பராசரரைப் புகழ்கிறார்.
தெளிந்த தத்வ அறிவை உடையவராம் பராசரர். ம்ருதுவாகவும், சாந்தமாகவும் பேசும் இவர், அதே சமயம் தனது வலிமையான கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்து எதிரணியினரை வாயடைக்கச் செய்து விடுவாராம்.
“பரா: – என்றால் எதிரணியினர் என்று பொருள். சர: – அம்பு மழை பொழிவது போன்று வாதங்களை முன்வைத்து அவர்களை அடக்கும் வெற்றி வீரர பராசரர் என்பது பொருள்” எங்கிறார் சுவாமி தேசிகன்.
முதிர்ந்த ஞானியான இவரின் வாதங்கள் பரப்ரம்மமாகிய பகவானின் பெருமையை உலகறியச் செய்கிறதாம்.
அதே போன்று கூரத்தாழ்வான் திருக்குமாரர் பராசர பட்டரும் இந்த சம்ப்ரதாயத்தின் தீபமாகத் திகழ்ந்தார்.
மூன்றாம் பராசரன்:-
இன்று 9.11.2019 (ஐப்பசி.23) நமது தேசத்தின் காவல் தெய்வமான ஸ்ரீராமபிரானின் பெருமைதனை “தோலாத தனிவீரன்” உலகறியச் செய்தார் வழக்கறிஞர் திரு.பராசரன் அவர்கள். மகாத்மா பராசர மகரிஷி போன்றே பழுத்த பகவத் அநுபவம், அநுக்ரகம் பெற்ற இவரின் ராமபிரான் விஷயமான தொண்டு மகத்தானது.
வாதங்களாகிய மழையினால் ப்ரதி வாதிகளை வியக்கும்படி செய்து தர்ம ஸம்ஸ்தாபனம் செய்த திரு “கேசவ பராசரனுக்கு” பல்லாண்டு பாடுவோம்.
“ஸநாதந ரத்னமான” இவரின் ராம கைங்கர்யம், ராமாயணத்தின் புகழ், ராமபிரானின் புகழ் உள்ளளவும் நிலைக்கும் என்பது திண்ணம். ஸம்ப்ரதாய ஆசார்யர்கள் இவருக்கு மாபெரும் பாராட்டு விழா நடத்தி, அடுத்த தலைமுறையினருக்கு இவரின் தொண்டினை அறிமுகப்படுத்த வேண்டுமென்று பேராவலுடன் எதிர் பார்க்கிறேன்.
– தாஸன் ஏபிஎன் சுவாமி.
இநà¯à®¤ வயதான காலதà¯à®¤à®¿à®²à¯ ஸà¯à®°à¯€ ராமரà¯à®•à¯à®•à¯ வாதாடிய மஹான௠வாழà¯à®• பலà¯à®²à®¾à®£à¯à®Ÿà¯. எதிரிகளை அனà¯à®ªà®¾à®²à¯ வீழà¯à®¤à¯à®¤à®¿à®¯à®µà®°à¯
நமஸà¯à®•à®°à®®à¯à®¸à¯