- கம்யூனிஸ்ட் பக்கெட் பிச்சைக்காரர்களே பதில் சொல்லுங்கள்!!
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது?
- கம்யூனிஸ்ட் கட்சி அருணன் கனகராஜ் போன்றவர்களே இந்த கேள்விக்கு எல்லாம் பதில் சொல்லுங்கள்!
இப்படி கேள்விகளைக் கேட்டிருக்கிறார் இந்து தமிழர் கட்சியின் தலைவர் ராம.ரவிக்குமார்.
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் தொடர்பாக, ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் செய்தியாளர்களைச் சந்தித்தார்…
அப்போது அவர் அவரவர் வீட்டில் இருந்து கொண்டே ஓம் நமோ நாராயணாய என்று சொல்லிக் கொண்டிருந்தால் கொரோனா வராது, மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்று கூறினார்.
அரசும் கொரோனா வராமல் தடுப்பதற்கு, வீட்டில் இருங்கள், விலகி இருங்கள் என்றுதான் கூறியது.
வெளியில் சுற்றாமல் வீட்டில் இருப்பதுதான் கொரோனா பரவாமல் தடுக்க வழி என்று அரசு கூறுவதை, தாம் ஓர் ஆன்மிகத் தலைவர் என்ற வகையில், வீட்டில் சும்மா இருக்காமல், ஓம் நமோ நாராயணாய என்றும் ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்றும் ஜபித்துக் கொண்டிருங்கள், புண்ணியம் சேரும் என்றவாறு ஜீயர் கூறியுள்ளார்.
ஆனால் அதனை கம்யூனிஸ்டுகளும், நாத்திகர்களும் மருந்து மாத்திரை சாப்பிடாமல், வெறுமனே ஓம்நமோ நாராயணாய என்று சொன்னால் நோய் வராமல் போய் விடுமா என்று கூறி, சர்ச்சையைக் கிளப்பியுள்ளனர். கம்யூனிஸ்ட்களின் இந்த கேலிக்கு ஆன்மிகவாதிகள் ‘அறிவற்றவர்களின் கேலிப் பேச்சு’ என்று கண்டனம் தெரிவித்து வருகின்றனர்…
இந்து தமிழர் கட்சியின் ராம ரவிக்குமார் எழுப்பியிருக்கும் கேள்விகளும் கண்டனமும்…
ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் அவர்கள் நாட்டில் நேர்மறையான சிந்தனைகள் வரவேண்டும் மன தைரியத்தோடு மக்கள் இருக்கவேண்டும் என்பதற்காக இந்துக்கோயில் ஆலயங்கள் எல்லாம் மூடப்பட்டிருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் உலகத்தில் இருக்கக்கூடிய அனைவரும் வீட்டில் அனைவரும் “ஓம் நமோ நாராயணா”
“ஓம் நமோ பகவதே வாசுதேவாய” இன்று 108 முறை நாம ஜபம் செய்யுங்கள். அப்படி செய்கின்ற பொழுது மருந்து மாத்திரைகள் தேவைப்படாது. கொரோனாவை விரட்டி விடலாம் என்றுதான் சொன்னார்.
வழக்கம்போல கருத்தை திரித்து பேசக்கூடிய கம்யூனிஸ்ட் கயவர்கள் 108முறை நாராயணா என்று சொன்னால் கொரோனா போய்விடுமா என்று கேள்வி கேட்கிறார்கள்.
கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான அனைவரும் ஓம் நமோ நாராயணா மந்திரம் சொல்லவேண்டும் என்று சொன்னாரா? கொரோனா விற்கு மருந்து மாத்திரைகள் வைத்தியம் பார்க்க வேண்டாம் என்று சொன்னாரா?
அறிவியலுக்குப் புறம்பாக மந்திரம் சொல்ல சொல்கிறார் என்று இவருக்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் இந்த கம்யூனிஸ்டுகளே!
கொரோனா நோய் தமிழ்நாட்டிலிருந்து வந்தது என்று ஸ்டாலின் பேசிய பொழுது உங்கள் வாய்களில் பலாப்பழம் இருந்ததா?
பாரதப் பிரதமர் மோடி அவர்கள் தூய்மைப் பணியாளர்கள் காவலர்கள் மருத்துவ அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று அனைவரும் நாட்டு மக்கள் அனைவரும் விளக்கு ஏற்றுங்கள்; அனைவரும் கரவொலி எழுப்புங்கள் என்று கோரிக்கை வைத்த பொழுது அந்த நன்றி பாராட்ட கூட மனமில்லாத மோடி எதிர்ப்பு , சீன ஆதரவு கம்யூனிஸ்ட் கயவர்கள்; விளக்கு ஏற்றினால்; கரவொலி எழுப்பினால், விளக்கு பிடித்தால் கொரோனா ஓடி விடுமா என்று கேள்வி முடி கேட்ட கம்யூனிஸ்ட் வெங்காயங்கள் தான் நீங்கள்!?
குருடன் பார்க்கிறான் செவிடன் கேட்கிறான் அவன் நடக்கிறான் என்று ஜெபக்கூட்டம் என்ற பெயரில் அறிவியலுக்குப் புறம்பாக கிறிஸ்தவ பாதிரிமார்கள் நடத்திக்கொண்டிருக்க கூடிய ஜெப கூட்டங்கள் குறித்தும், அதுபோன்று நடத்தக்கூடிய கிருஸ்துவ பாதிரியார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டுமென்று என்றாவது இந்த கம்யூனிஸ்ட் பேர்வழிகள் கருத்து தெரிவித்திருக்கிறார்களா?
இயேசுநாதர் எல்லாம் சுகம் தருகிறார் என்றால் எதற்கு இவர்கள் ஆஸ்பத்திரி நடத்துகிறார்கள்? இயேசு நாதரை எல்லாம் செய்கிறார் என்றால் டாக்டர்கள் எதற்கு ஆஸ்பத்திரிகளில் இழுத்து மூடுங்கள் என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை காகித கழுதை புலிகள் அறிக்கை வெளியிடுவார்களா? கிறிஸ்தவர்களை பார்த்து கேள்வி கேட்க இவர்களுக்கு ஆண்மை இருக்கிறதா?
கருணாநிதி செத்தபிறகு முரசொலி பத்திரிக்கை வைத்து புதைத்தார்கள். தயிர் வடை எல்லாம் வைத்து படைத்தார்கள். மலர்வளையம் எல்லாம் வைத்தார்களே!
இவைகள் எல்லாம் பகுத்தறிவுக்கு எதிரானது; செத்த பிணம் எப்படி சாப்பிடும் அறிவியலுக்கு முரணானது என்று கேள்வி கேட்பதற்கு, இந்த ஏலம் போன; விலைக்கு போன கம்யூனிஸ்டுகளுக்கு தைரியம் இருக்குமா? இருக்காது.
இவர்கள் லீலாவதி என்கின்ற கம்யூனிஸ்ட் பெண்மணியை கட்சி சுயநலத்திற்காக காவு கொடுத்துவிட்டு, பதவி சுகத்திற்காக ஓட்டு சீட்டு அரசியலுக்கு அறிவாலயம் வாசலில் பிச்சை எடுக்கும் பக்கெட் பிச்சைக்காரர்கள்.
“மதங்களே இல்லை” என்று சொல்லி, மத விஷயங்களில் தலையிட்டு, கொண்டு மதத் தலைவர்களின் கருத்துக்களை விமர்சனம் செய்யும் இந்த மானங்கெட்ட பிறவிகள் நோயிலிருந்து உலகம் நன்மை பெறவேண்டும் குரான் வாசகங்கள் வாசியுங்கள் என்று முஸ்லிம் மதத்தவர்கள் சொல்லுகின்ற பொழுது அதை விமர்சித்து பேசுவதற்கு இவர்களுக்கு என்றாவது துணிச்சல் இருக்கிறதா?
கருப்புக்கொடி ஏந்தி வீட்டில் முன்பு போராட்டம் செய்யுங்கள் சாராய கடைகளை மூடி விடுவார்கள் என்று போராடிய போதும் கருப்புக்கொடி ஏந்தி போராடினால் எப்படி சாராயக்கடையை மூடுவார்கள் என்று எந்த பகுத்தறிவு சொன்னது இவர்களின் போலி நாடக அரசியலை கண்டு ஆசனவாய் தான் சிரிக்கும்.
ஊர் சிரித்தது ஊர் அழுதது என்றெல்லாம் பேசுகிறோம் ஊருக்கு எங்கே வாய் இருக்கிறது என்ற கேள்வி கேட்பார்களா இந்த அதி புத்திசாலிகள்.. என்று மிகக் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார் ராம.ரவிக்குமார்.