நெல்லை முழுவதும் வேல் வைத்து கந்தசஷ்டி கவசம் பாராயணம்
கருப்பர் கூட்டம் மற்றும் அவர்களுக்குப் பின்னால் செயல்படும் கூட்டத்தினரை கண்டிப்பதுடன் கொரோனா நோயில் இருந்தும் மக்கள் விடுபட தமிழ் கடவுள் முருகப் பெருமானின் கந்த சஷ்டி கவசத்திற்கு ஏற்பட்ட களங்கத்தை போக்க சாது சந்நியாசிகள் மடாதிபதிகள் ஆதினங்கள் ஆன்மீக பெரியோர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நெல்லை மாவட்டம் முழுவதும் விதிகளில் வீடுகள் வாசலில் வேல் கோலம் மிட்டு சமூக இடைவெளியுடன் இன்று மாலை 6 மணி* அளவில் ஆடி சஷ்டியை முன்னிட்டு வேல் மற்றும் முருகர் படம் வைத்து பூஜை செய்து கந்தசஷ்டி கவசம் படித்தனர் மக்கள்.
நெல்லையில் தியாகராஜநகர், கொக்கிரகுளம், ஜங்சன், பேட்டை, கருப்பந்துறை, திருமால்நகர் , ரெட்டியார்பட்டி ,மணிமூர்த்திஸ்வரம், தச்சநல்லூர் உலகம்மன் கோவில் காலணி , வடக்கு செழியநல்லூர், மற்றும் மாவட்டம் முழுவதும் ஆயிரகணக்கான வீடுகளில் சஷ்டி கவசம் படித்துள்ளனர்.
விஹெச்பி மாவட்ட தலைவர் முத்துகுமார், மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி, மாவட்ட இணை செயலாளர் பாலவிக்னேஷ், மாவட்ட பஜ்ரங்கள் அமைப்பாளர் ஸ்ரீமுத்துராஜ், சத்சங்க அமைப்பாளர் அசோக்,
துறவியர் பேரவை சுவாமி சிவானந்தமய்யா, தச்சநல்லூர் மண்டல் செயலாளர் இசக்கி, மானூர் ஒன்றிய செயலாளர் தங்கவேல், குருசாமி, மணிகண்டன் ஆகியோர் இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்து அனைத்து பகுதிகளிலும் கலந்து கொண்டனர்.
கந்தசஷ்டியை இழிவுபடுத்திய திமுக கறுப்பர் கூட்டத்திற்கு எதிராக சைவ ஆதீன பெருமக்களின் இன்றைய வேல்பூஜை
திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று கந்தஷ்டி கவசம் பாராயனம் அந்தணர் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் முத்துராமன் தலைமையில் நடைபெற்றது.