― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeகிரைம் நியூஸ்ராஜபாளையம் அருகே பாழடைந்த கிணற்றில் மூட்டை கட்டிய நிலையில் பெண் உடல் மீட்பு!

ராஜபாளையம் அருகே பாழடைந்த கிணற்றில் மூட்டை கட்டிய நிலையில் பெண் உடல் மீட்பு!

- Advertisement -
rajapalayam lady body in well

ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே நத்தம்பட்டி செல்லும் சாலைப்பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிணற்றில், சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் 50 வயது மதிக்கத் தக்க பெண் சடலம் மீட்கப்பட்டது. கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

rajapalayam lady body in well1

ராஜபாளையம் அருகே நத்தம்பட்டி செல்லும் சாலையில் கொட்டாரை கண்மாய் பகுதியில், பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிணறு பராமரிப்பு இன்றி உள்ளது. அந்தப்பகுதியில் துர்நாற்றம் வீசியதையடுத்து, அந்தப்பகுதியில் சென்றவர்கள் கிணற்றுக்குள் பார்த்தனர்.

rajapalayam lady body in well2

அப்போது, சாக்கு மூட்டையில் கட்டிய நிலையில் சடலம் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு, கிணற்றில் மிதந்த 50 வயது மதிக்கத் தக்க பெண் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

rajapalayam lady body in well3

இறந்து கிடந்த பெண் யார்? அவரை கொலை செய்து மூட்டை கட்டி கிணற்றில் வீசியது யார் என போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version