மதுரை: சசிகலா விரைவில் தமிழகம் வருவார் என, அமமுக பொதுச் செயலர் டிடிடிவி தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் கட்சிப் பிரமுகர் மகேந்திரன் இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது.
மன்னிப்புக் கேட்டால் கட்சியில் சேர்ப்போம் என சிலர் கூறி வருகின்றனர். யார் மன்னிப்பு கேட்பார்கள் என்பது பிறகு தெரியும்.
அதிமுக பிரச்னையை நாங்கள் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்.
வருகின்ற சட்டமன்ற தேர்தலில் யார் பக்கம் மக்கள் இருக்கிறார்கள் என, நன்கு தெரியும்.
அதிமுகவை பொறுத்தமட்டில் அம்மாவுக்கு தான் அதிக அதிகாரம். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்வது அம்மா மட்டும் தான்.
வருகிற 9.ம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார். உடல் நலம் சரியில்லாததால், அவர் இம் மாதம் 9.ம் தேதி வருகிறார்… என்றார்.