Home உள்ளூர் செய்திகள் ‘விவசாயி’ பாப்பம்மாளை சந்தித்து… ஆசிபெற்ற பாரதப் பிரதமர்!

‘விவசாயி’ பாப்பம்மாளை சந்தித்து… ஆசிபெற்ற பாரதப் பிரதமர்!

இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வரும் கோவை பாப்பம்மாளை பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை நேரில் சந்தித்தார்.

அரசு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை கோவை வந்தார்.

அப்போது, இயற்கை விவசாயத்தில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக அண்மையில் பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி பாப்பம்மாளை அவர் சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, இருவரும் கைகூப்பி வணக்கம் செய்துகொள்ளும் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது முகநூல் மற்றும் கட்டுரைப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version