- சப்பாத்தி வேலையை காட்டியது… கண் பார்வை பறிபோனது.
- மத்திய பிரதேசத்தில் நடந்த சம்பவம்…
- ஒரு நாளைக்கு 40 சப்பாத்திகள்..
- 1206ஐத் தொட்ட சுகர் லெவல்.
- தலையில் சீழ் பிடித்து கண்பார்வை இழந்த சிறுவன்.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் என்பார்கள் அல்லவா… “அதி சர்வத்ரா வர்ஜயேத்” என்பர் பெரியோர். அதாவது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்.
முக்கியமாக சாப்பாட்டு விஷயத்தில்… எத்தனை ருசியாக இருந்தாலும் நம் வயிற்றுக்கு போதுமான அளவு மட்டும் சாப்பிட வேண்டுமே தவிர அளவுக்கதிகமாக போட்டு திணிக்க கூடாது. அவ்வாறு தின்றால் எத்தகைய விளைவுகள் நேரும் என்பதை இதைப் பார்த்தால் புரியும்.
12 வயது சிறுவனுக்கு சப்பாத்தி என்றால் மிகவும் பிரியம். ஒரு நாளைக்கு 40 சப்பாத்திகள் தின்பான். அதன் பலனாக கண்பார்வையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மருத்துவர்கள் அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்து பார்வையை மீட்டுத் தந்தார்கள்.
மத்திய பிரதேஷ் சிவப்பூர் மாவட்டம் கோட் கிராமத்தைச் சேர்ந்த 12 வயது சந்தீப்பிற்கு கண்பார்வை மந்தமாகத் தொடங்கியது. ஒரு நிலையில் முழுவதும் பார்வையை இழந்தான். அதுவரை இந்த பிரச்சனையை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்த அவனுடைய தந்தை மகனுக்கு முழுவதும் கண் தெரியவில்லை என்ற உடன் ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அதற்குள் சந்திப்பின் உடலில் உறுப்புகளெல்லாம் வேலை செய்ய மறுத்து விட்டன.
அவன் வெறும் மூச்சு விடும் பிராணியாக மாறிப் போனான். மருத்துவமனையில் சந்தீப்புக்கு பரிசோதனைகள் நடத்திய மருத்துவர்கள் அவனுடைய ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். சந்தீப்பின் பிளட் சுகர் லெவல் 1206 மில்லிகிராம் ஆக இருப்பதாக தெரிவித்தார்கள். இத்தனை சிறுவயதில் இத்தனை பெரிய சுகர் லெவல் இருப்பது எதனால் என்று ஆச்சரியப்பட்டு அவனுடைய உணவு குறித்து ஆராய்ந்தார்கள்.
சந்தீப் தினமும் 40 சப்பாத்தி சாப்பிடுவான் என்று அவனுடைய தந்தையார் தெரிவித்தார். அதனால் சுகர் லெவல் அதிகமான துடன் மூளையில் சீழ் பிடித்து அவனுடைய கண் பார்வையை இழந்து விட்டான் என்று கூறியதோடு உடலிலுள்ள மீதி உறுப்புகளும் வேலை செய்வதை நிறுத்தி விட்டன என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சந்தீப்பின் தலையில் அறுவை சிகிச்சை செய்து 720 ml சீழை வெளியேற்றினார்கள். சர்க்கரை லெவலை குறைப்பதற்காக தினமும் சந்தீப்புக்கு ஆறு யூனிட்டுகள் இன்சுலின் கொடுக்க ஆரம்பித்தார்கள். சுகர் லெவல் சாதாரண நிலைக்கு வந்தவுடன் கண் மருத்துவர் பரிசோதித்து டயாபெடிக் ரெடினோபதியால் பாதிப்புக்கு உள்ளானான் என்று தெரிவித்தார்கள்.
முடிந்தவரை விரைவில் சந்தீப்புக்கு அறுவை சிகிச்சை செய்தால் அவனுடைய பார்வை திரும்ப வரும் என்றார்கள். சந்தீப்பின் பெற்றோர் அதற்கு அங்கீகரித்தனர். ஆபரேஷன் நடந்தது. இப்போது சந்தீப்பால் பார்க்க முடிகிறது.
தற்போது ஆரோக்கியத்திற்கு எப்படிப்பட்ட ஆபத்தும் இல்லை என்றும் அவனை அப்சர்வேஷனில் வைக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.