Home கிரைம் நியூஸ் ஒரே ஒரு போன்.. 13 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

ஒரே ஒரு போன்.. 13 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

மதுரையில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் இருந்து சுமார் 13 லட்சம் ரூபாயை வங்கியில் இருந்து பேசுவதாக கூறி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை பழங்காநத்தம் அக்ரகாரம் தெரு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் இவருக்கு வயது 70, இவர் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் வீட்டின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து மர்மநபர் வங்கி மேலாளர் பேசுவதாக கூறி தங்களுடைய வங்கி விவரங்களை கேட்டுள்ளார்.

நாராயணனும் வங்கி அதிகாரிகள் என நினைத்து அனைத்து தகவலையும் தெரிவித்த நிலையில் வங்கியில் இருந்து சுமார் 13 லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளதாக குறுந்தகவல் வந்துள்ளது.

அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் மதுரை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்கள். இச்சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version