Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் உங்கள் சங்கடங்கள் தீர இந்த மந்திரம்..!

உங்கள் சங்கடங்கள் தீர இந்த மந்திரம்..!

vinayakar 3
vinayakar 3

ஸங்கடநாஸன கணேச_ஸ்தோத்ரம்

( ஸ்ரீ நாரதர் அருளிய இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்வதால் வித்யை தனம் புத்ரன் மோட்சம் மற்றும் லாபங்கள் உண்டாகி கடன் வியாதி பயம் போன்ற கஷ்டங்கள் நீங்கும் )

ஸ்ரீ கணேசாய நம:

நாரத உவாச

ப்ரணம்ய ஸிரஸா தேவம்
கௌரீபுத்ரம் விநாயகம்
பக்தாவாஸம் ஸ்மரேந் நித்யமாயு:
காமார்த்த ஸித்தயே

ஸ்ரீ கணேசரை நமஸ்கரித்து

நாரதர் சொல்கிறார்

( தேவனும் கௌரி புத்திரனும் பக்தர்களிடம் வசிப்பவருமான விநாயகப் பெருமானை ஆயுள் காமம் பொருள் இவைகளை அடைவதின் பொருட்டு தினமும் நமஸ்கரித்து வணங்கவும் )

ப்ரதமம் வக்ரதுண்டகம் ச
ஏகதந்தம் த்விதீயகம்
த்ருதீயம் க்ருஷ்ணபிங்காக்ஷம்
கஜவக்த்ரம் சதுர்த்தகம்

( முதலாவதாக வளைந்த துதிக்கையை உடையவனையும் இரண்டாவதாக ஒரு தந்தத்தை உடையவனையும் மூன்றாவதாக கருவிழிகளுக்கு அருகில் சிவப்புடன் கூடிய கண்களைக் கொண்டவனையும் நான்காவதாக யானைமுகம் கொண்டவனையும் துதிக்க வேண்டும் )

லம்போதரம் பஞ்சமம் ச
ஷஷ்டம் விகடமேவ ச
ஸப்தமம் விக்னராஜம் ச
தூம்ரவர்ணம் ததாஷ்டமம்

( ஐந்தாவதாக தொங்குகிற வயிற்றை உடையவனையும் ஆறாவதாக மதஜலப் பெருக்கை உடையவனையும் ஏழாவதாக விக்னங்களுக்கு அரசனையும் எட்டாவதாக கருஞ்சிவப்பு நிறத்தை உடையவனையும் துதிக்க வேண்டும் )

நவமம் பாலசந்த்ரம் ச
தசமம் து விநாயகம்
ஏகாதசம் கணபதிம்
த்வாதசம் து கஜானனம்

( ஒன்பதாவதாக சந்திரனை நெற்றியில் தாங்கியவனையும் பத்தாவதாக விநாயகனையும் பதினொன்றாவதாக பூதகணங்களின் பதியையும் பனிரெண்டாவதாக யானைமுகத்தோனையும் துதிக்க வேண்டும் )

த்வாத சைதானி நாமானி
த்ரி ஸந்த்யம் ய: படேந்நர:
ந ச விக்னபயம் தஸ்ய
ஸர்வ ஸித்திகரம் ப்ரபோ:

( மேலே சொன்ன கணபதியின் இந்த 12 நாமாக்களையும் தினமும் மூன்று வேளை தவறாது எவர் பாராயணம் செய்கிறாரோ அவருக்கு சர்வ காரியமும் சித்தியாகி எந்த இடையூறும் ஏற்படாது )

வித்யார்த்தீ லபதே வித்யாம்
தனார்த்தீ லபதே தனம்
புத்ரார்த்தீ லபதே புத்ரான்
மோக்ஷார்த்தீ லபதே கதிம்

( கல்வியை வேண்டுகிறவன் கல்வியையும் செல்வத்தை வேண்டுகிறவன் செல்வத்தையும் பிள்ளைப்பேறை வேண்டுகிறவன் பிள்ளைப்பேறையும் மோட்சத்தை வேண்டுகிறவன் மோட்சத்தையும் அடைகிறான் )

ஜபேத் கணபதி ஸ்தோத்ரம்
ஷட்பிர்மாஸை: பலம் லபேத்
ஸம்வத்ஸரேண ஸித்திம் ச
லபதே நாத்ர ஸம்சய:

( இந்த நாமாக்களை 6 மாதம் ஜபித்தால் நினைத்த காரியம் கைகூடும் 1 வருடம் ஜபித்தால் அணிமாதி சித்திகள் கிடைக்கும் )

அஷ்டப்யோ ப்ராஹ்மணேப்யச்ச
லிகித்வா ய: ஸமர்பயேத்
தஸ்யா வித்யா பவேத் ஸர்வா
கணேசஸ்ய ப்ரஸாதத:

( எவர் ஒருவர் 8 வேதவித்துக்களுக்கு இந்த ஸ்தோத்திரத்தை எழுதிக் கொடுக்கிறாரோ அவருக்கு சகலவிதமான வித்தைகளும் கணபதியின் அருட்பிரசாதத்தினால் கைகூடுகிறது )

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version