பேன் தொல்லையா?
சில பூண்டு பற்களை அம்மியில் வைத்து மை போல் அரைத்து எலுமிச் சம்பழச் சாற்றில் கவந்து தலைக்குத் தேய்த்துக் குளிக்க பேன் தொல்லை ஒழியும்.
வெங்காயத்தின் மகிமை
டிப்திரியா, டி.டி.நோய்க் கிருமிகளைக் கொல்லும் சக்தி வெங்காயச் சாற்றுக்கு உண்டு. இரத்த மிகு அழுத்தம், குடல் சுரப்பு நோய்களுக்கும் கல்லீரல், இரைப்பை நோய்களுக்கும் வெங்காயம் சிறந்த பலனைத் தரும். தெம்பளிக்கும். பற்களில் போட்டு மென்று தின்ன பற்சொத்தை வராது. வாந்தி நிற்கும். வெங்காயத்தை நசுக்கி முகர தூக்கம் வரும்.
கிச்சுக் கிச்சு இருமல் சரியாக…
பேசத் துவங்கினாலே கிச்சு கிச்சு இருமல் வந்து தொல்லை தரும். துளசி இலைகளை வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாற்றை மட்டும் தொண்டையில் படும்படி இறக்க சில நாள்களில் குணமாகும்.
நீரிழிவு நோய்க்கு…
ஆறாக்கீரையை பருப்பு, எண்ணெய் சேர்க்காமல் சிறிது உப்பு கலந்து சுவைக்கு பொரித்த அரிசியை மாவாக்கி சேர்த்து உண்ண கட்டுப்படும்.
மாந்துளிர் அல்லது ஆவாரம்பூ கஷாயம் அருந்த நீரிழிவு நோய் கட்டுப்படும்.
சிவப்புத் தண்டுக் கீரையின் விதை வெள்ளையாக இருக்கும். இதனை தினமும் 10 கிராம் எடுத்து மோர் விட்டரைத்து காலை வெறும் வயிற்றிலும் இரவு உணவுக்குப் பிறகும் சாப்பிட நோய் தீரும்.
நித்திய கல்யாணி செடியில் வெள்ளை நிறமாக பூக்கும் செடிகளும் ரோஸ் நிறமாக பூக்கும் செடிகளும் உண்டு. ரோஸ் நிறப் பூக்களைப் பறித்து ஒரு மணி நேரம் வைத்து விட்டால் அத்தனைப் பூக்களும் வெள்ளையாகி விடும். இவை மருந்துக்கு உதவாது. இயற்கை யாகவே வெள்ளை நிறப் பூக்களுக்கு நீரிழிவைக் கட்டுப்படுத்தும் குணம் உண்டு. இந்தப் பூக்களில் தினமும்5 பூக்களைப் பாலில் போட்டுக் காய்ச்சி காபிக்கு பதில் குடித்து வர சிறப்பான பலன் கிடைக்கும்.
வாழைத்தண்டின் அடிபாகத்தை புளி சேர்க்காமல் பொரித்துச் சாப்பிட்டாலும் நீரிழிவு கட்டுப்படும்.
நகத்தில் சொத்தையா?
கீழாநெல்லி இலையை சிறிது நல்லெண்ணெய் விட்டரைத்து இரவில் தடவி வர 10 நாள்களில் குணம் தெரியும்.