― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்காட்டுப் பன்றிகளால் தென்னை, வாழை, நெல் பயிர்கள் சேதம்! விவசாயிகள் சோகம்!

காட்டுப் பன்றிகளால் தென்னை, வாழை, நெல் பயிர்கள் சேதம்! விவசாயிகள் சோகம்!

- Advertisement -
chizhavanthan banana field

சோழவந்தானில் காட்டுப் பன்றிகளால் தென்னை வாழை நெல் பயிர்கள் சேதம்.

சோழவந்தான்: சோழவந்தான் வடகரை கண்மாய் தென்பகுதி பேட்டை கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சுமார் 1000 ஏக்கரில் வாழை தென்னை நெல் விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகரை கண்மாய் பகுதிகளில் பதுங்கி இருக்கும் காட்டுப்பன்றிகள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக விவசாயப் பகுதியில் புகுந்து வாழை தண்டுகளை முட்டித்தள்ளி வாழை மரத்தில் உள்ள குருத்துகளை கடித்து தின்று விடுகின்றன

இதனால் வாழைகள் பெருத்த சேதம் அடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர் இதே போல் தென்னங்கன்றுகளை காட்டுப்பன்றிகள் பிடுங்கி எரிந்து தேங்காயில் உள்ள பருப்புகளை தின்று விடுவதாகவும் நெற்கதிர்கள் விளைந்துள்ள பகுதியில் நெற்கதிர்களை சேதம் படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றன

இதுகுறித்து வாழை விவசாயி மோகன்ராஜ் கூறியதாவது

சோழவந்தான் வடகரை தென்பகுதியான பேட்டை கிராமத்தில் சுமார் ஆறு ஏக்கரில் வாழை விவசாயம் சுமார் 6 லட்சம் செலவில் செய்து வருகிறேன் இரண்டு ஆண்டுகளாக காட்டுப்பன்றிகள் விவசாய பகுதிக்குள் நுழைந்து வாழைகளை சேதப்படுத்தி குருத்துகளை தின்றுவிட்டு செல்கின்றன இதில் சில வாழைகளை திருப்பி நட்டு வைக்கிறோம் அதையும் காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருகின்றன

இதுபோக வாழையில் ஊடு பயிராக தென்னங்கன்றுகளை நட்டு வைத்துள்ளேன் அதையும் தென்னகன்றில் உள்ளகுருத்தையும் காட்டுப்பன்றிகள் தின்று சேதப்படுத்தி விடுகின்றன இதுபோக இரவு நேரங்களில் இங்கு வருவதற்கு பயமாக உள்ளது அதிகாலையில் இரண்டு விவசாயிகளை காட்டுப்பன்றி கடித்திருக்கிறது இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக வருவதால் நாங்கள் இப்பகுதிக்கு வருவதற்கு பயமாக உள்ளது இது குறித்து வேளாண்மை துறை வனத்துறையிடம் பலமுறை எடுத்துக் கூறியும் காட்டுப்பன்றியை தடுத்து நிறுத்த முடியவில்லை

இதனால் தொடர்ந்து இப்பகுதி உள்ள வாழை தென்னை கன்று நெற்கதிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டத்தை இந்த காற்றுப் பன்றிகள் செய்து வருகின்றன இனியாவது வனத்துறை காற்றுப்பன்றிகளை பிடித்து மலைப்பகுதியில் விட வேண்டுமென விவசாயிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்

இதே போல் வடகரை கண்மாய் கீழ்பகுதியில் நெல் மற்றும் வாழை விவசாயம் செய்து வரும் சரவணன் கூறியதாவது

என் வயலுக்கு வரும் காட்டுப் பன்றிகள் ஆண்டியப்ப மேடு வரை சுமார் ஒரு கிலோ மீட்டருக்கு மேலாக சென்று நெல் வாழை தென்னங்கன்றுகளை சேதப்படுத்தி வருகிறது இதற்காக என் வயல் அருகே கட்டுக் கம்பியால் தற்பாதுகாப்பு செய்து வருகிறேன் இருந்தாலும் இந்த கம்பியையும் காட்டுப் பன்றிகள் முட்டித் தள்ளி விடுகின்றன இதுகுறித்து வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து காட்டுப்பன்றிகளை பிடித்துச் செல்ல வேண்டும் என்று கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version