மதுரை: மதுரையில், விவேகானந்தர் பிறந்தநாளை இந்தியா அரசாங்கம் அறிவித்துள்ளபடி தேசிய இளைஞர் தினமாக ராமகிருஷ்ண மடத்தில் கொண்டாடப்பட்டது .
மதுரை நத்தம் சாலையில் அமைந்துள்ள ரிசர்வ்லயன் பகுதியில், ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம்: என்று, மத்திய அரசு 1985-ஆம் ஆண்டு அறிவித்தது. அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் என்று,இந்தியா முழுவதும் உள்ள பல அமைப்புகள் கொண்டாடி வருகின்றனர்.
விழாவில், ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி கமலாத்மானந்தர் ஆசி உரை வழங்கினார். சுவாமி அர்கபிரபானந்தா சிறப்புரையும் நிகழ்த்தினார். சிறப்பு பேச்சாளர்கள் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை மற்றும் மாணவர்களுக்கு போதனைகளை எடுத்துரைத்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் சுவாமி அர்கபிரபானந்தா கூறியது:
சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் என்று, மத்திய அரசு அறிவித்தது. அது முதல் கடந்த 38 ஆண்டுகளாக, ஒவ்வோர் ஆண்டும், சுவாமி விவேகானந்தர் பிறந்த ஜனவரி 12-ஆம் தேதியை, தேசிய இளைஞர் தினம் நடைபெற்று வருகிறது
தேசிய இளைஞர் தின நிகழ்ச்சியில், பங்கேற்க 11பள்ளி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் அழைக்கப்பட்டன. இதில், மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 1300 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மதுரை சிம்மக்கல்லை சார்ந்த சாரதா வித்யாவனம், மாணவிகள், சுவாமி விவேகானந்தர் பற்றிய பாடல்களை பாடினர். பங்கேற்ற மாணவர்கள் மாணவியர்கள் அனைவருக்கும் “எனது பாரதம் அமர பாரதம் ” என்ற சுவாமி விவேகானந்தர் நூல் அனைவருக்கும் வழங்கக்கப்பட்டது.
தஞ்சாவூர் மடத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்:
தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சார்பில் ஜன.10,11,12 ஆகிய மூன்று நாட்களுக்கு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஜன. 10 அன்று, கும்பகோணம், அரசு கவின் கலைக் கல்லூரியில் சுவாமி விவேகானந்தர் ஓவியத் திருவிழாத் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. கும்பகோணம், பாணாதுறை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேசிய இளைஞர் தின விழாவில் சுமார் 100 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
ஜன. 11 அன்று, அரசுப் பள்ளியில் படிக்கும் காது கேளாத, வாய் பேசாத மாணவ மாணவிகளுக்கான விவேகானந்த விளையாட்டுத் திருவிழா நடத்தி பரிசளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 130 மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.
தேசிய இளைஞர் தினமான ஜன.12 அன்று காலை 7.30க்கு தஞ்சாவூர், ஸ்ரீராமகிருஷ்ண மடத்து வாசலில் சுவாமிஜியின் திருவுருவப் படத்திற்குப் பக்தர்களின் புஷ்பாஞ்சலி நடைபெற்றது. காலை 09.15க்கு கும்பகோணத்தில் சுவாமிஜி உரையாற்றிய இடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு குடந்தை எம்.எல்.ஏ, அன்பழகன் மாலை அணிவித்தார். காலை 10.30க்கு ஆடுதுறையில் விவேகானந்தர் விளையாட்டுத் திருவிழாவில் மாநில அளவிலான இறகு பந்து போட்டித் தொடங்கி நடைபெற்றது.
மதியம் ஆடுதுறை, அரசு மேல் நிலைப் பள்ளியில் சுவாமிஜியின் பிறந்த நாள் விழாவில் 150 மாணவர்கள் கலந்துகொண்டார்கள். பிற்பகல் 3.00 மணிக்கு கும்பகோணத்தில், 1876 -இல் தொடங்கப்பட்ட பாரம்பரியம் மிக்க நேட்டிவ் மேல்நிலைப் பள்ளியில் தேசிய இளைஞர் தினத்தை ஒட்டி, தஞ்சாவூர் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தா உரை நிகழ்த்தினார்.