மதுரையில், பா.ஜ.க. வேட்பாளர் இராம சீனிவாசன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
இன்று மாலை பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் பேராசிரியர் இராம சீனிவாசன் தாமரை சின்னத்தில் வாக்குகள் சேகரிக்க, சோழை
அழகுபுரம் மற்றும் ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தின் போது மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் மகா. சுசீந்திரன் மற்றும் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர கே.சி.திருமாறன் மற்றும் கூட்டணி கட்சிகள் நிர்வாகிகள் மாவட்ட பார்வையாளர் கார்த்திக்
பிரபு துணைத் தலைவர்கள் ஜோதி மணிவண்ணன்,
பொது செயலாளர்கள் சந்தோஷ் சுப்பிரமணியன், கருட கிருஷ்ணன் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் வேல்பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.