சென்னை -செம்பியம் இந்துக்களே நன்றாக தூங்குங்கள்; கருமாரியம்மன் கோவிலை கன்னிமேரி அம்மன் கோவிலாக மாற்றப் போகிறார்கள் எச்சரிக்கை… என்று கூறுகிறார் இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலர் ராம.ரவிக்குமார்.
சென்னை பெரம்பூர் செம்பியம் பகுதியிலுள்ளது அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில். சென்னை பெரம்பூர் செம்பியம் ராகவன் தெரு பகுதியில் உள்ள இந்த அம்மன் கோயில் சுற்றுச் சுவரில், கோயிலுக்கு உரிய வெள்ளை அடித்து செம்மண் காவி தீட்டவில்லை. மாறாக, சுவரில் எழுதப்பட்ட ஒரு வாசகம் காண்போரை கொதிப்படைய வைத்துள்ளது.
“இயேசு கிறிஸ்து அன்றும் இன்றும் என்றும் மாறாது இருக்கிறார் .”
– என்று கோவில் சுவரில் வாசகம் எழுதிப் போட்டிருப்பது கடந்து செல்லும் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
இந்துக் கோவில் சுவர்களில் வந்து பைபிள் வாசகம் எழுதுவது, இந்து கோவில் சுவர்களை ஒட்டி புதியபுதிய சர்ச்சுகள் கட்டுவது, இதுதான் கிறிஸ்தவர்களுடைய வாடிக்கையான நடவடிக்கை என்று குமுறுகிறார்கள் அங்குள்ளவர்கள்.
இது குறித்து கருத்து தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் ராம.ரவிக்குமார், “எம்மதமும் சம்மதம் ” என்று பரந்த மனசு பேசி பாழாய்ப்போன இந்துக்களே நன்றாக தூங்குங்கள். செம்பியம் அருள்மிகு கருமாரியம்மன் திருக்கோயில் விரைவில் “மேரி அம்மன் ஆலயமாக” மாறப் போகிறது. அப்பொழுதும் நீங்கள் சொல்வீர்கள் எம்மதமும் சம்மதம் என்று ….
எந்த ஒரு இந்துவும் கிறிஸ்தவ சர்ச்சுகளின் காம்பவுண்ட் சுவர் களில் ” சிவனே மெய்யான தெய்வம்” “சிவன் அழைக்கிறார்” ஓம் சக்தி பராசக்தி என்று எங்காவது எழுதியதுண்டா? அவ்வாறு எழுதவந்தால், அதை கிறிஸ்தவர்கள் அனுமதித்த வரலாறு தமிழகத்தில் ஏதாவது ஓரிடத்தில் உண்டா? இந்துக்களே யோசனை செய்யுங்கள்… என்றார்.