இந்தியா – மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 34-வது லீக் ஆட்டம் இன்று மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் மதியம் 3 மணிக்கு தொடங்கியது.
இந்தப் போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில், இந்திய அணி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்றார். இதை அடுத்து தாம் பேட்டிங்கை தேர்வு செய்வதாகக் கூறினார்.
இந்திய அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள்:
- ரோகித் சர்மா, 2. லோகேஷ் ராகுல், 3. விராட் கோலி, 4. விஜய் சங்கர், 5. கேதர் ஜாதவ், 6. எம்எஸ் டோனி, 7 ஹர்திக் பாண்டியா, 8. சாஹல், 9. குல்தீப் யாதவ், 10. முகமது ஷமி, 11. பும்ரா.