ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி
வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும்
-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
1928ஆம் ஆண்டில் இந்தியாவின் ஹாக்கி அணி தனது முதல் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை வென்றது, 1960 வரை, இந்திய ஆண்கள் அணி ஒலிம்பிக்கில் தொடர்ந்து தங்கப் பதக்கம் பெற்று வந்தது. தொடர்ந்து ஆறு தங்கப் பதக்கங்களை வென்றது.
இந்த நேரத்தில் இந்த அணி 30-0 என்ற கோல் கணக்கில் வெற்றியைப் பெற்ற வரலாறும் உண்டு, முதல் ஆட்டத்திலிருந்து 1960 தங்கப் பதக்க இறுதிப் போட்டியில் தோற்றது வரை. இந்தியாவின் ஹாக்கி அணி ஒலிம்பிக்கில் எட்டு தங்கப் பதக்கங்களை வென்ற மிக வெற்றிகரமான அணியாகும்.
1928, 1932, 1936, 1948, 1952, 1956, 1964, 1980 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன்களாக உருவெடுத்தது. ஒலிம்பிக் வரலாற்றில் விளையாடிய 126 போட்டிகளில் 77 வெற்றிகளைப் பெற்றது. அவர்கள் வேறு எந்த அணியையும் விட ஒலிம்பிக்கில் அதிக கோல்களை அடித்திருக்கிறார்கள். 1928 மற்றும் 1956 ஆம் ஆண்டுகளில் எதிரணியை ஒரு கோல் கூட அடிக்கவிடாமல் ஒலிம்பிக்கில் வென்ற ஒரே அணி இந்திய அணியாகும்.
1928 முதல் 1959 வரை இந்திய ஹாக்கிக்கு ஒரு பொற்காலம் எனக் கூறலாம். இந்திய ஹாக்கி கூட்டமைப்பு அமைக்கப்பட்ட பின்னர் 1928 ஒலிம்பிக்கில் ஒரு அணியை அனுப்ப இந்தியா முடிவு செய்தது. குழு நிலையில் இந்தியா ஆஸ்திரியாவை 6-0, பெல்ஜியம் நாட்டை 9–0, சுவிட்சர்லாந்தை 5–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. ஜெய்பால் சிங் முண்டாவின் தலைமையில் நடந்த இறுதிப் போட்டியில் அவர்கள் நெதர்லாந்தை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர்.
1932ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் குழு நிலையில் ஜப்பானை 11-1 அமெரிக்காவை 24-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் தயான்சந்த் 8 கோல்களையும், ரூப் சிங் 10 கோல்களையும் அடித்தனர், இது இத்தனை வருடங்களுக்குப் பிறகும் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியா 1936 ஒலிம்பிக்கிற்கு சென்று, தனது மூன்றாவது தங்கப் பதக்கத்தை வென்றது.
இந்த முறை கேப்டன் புகழ்பெற்ற வீரர் தயான் சந்த். குழு நிலையில் இந்தியா ஜப்பானை 9-0, ஹங்கேரி 4-0, அமெரிக்கா 7-0 என்ற கணக்கில் வென்றது. அரையிறுதியில் அவர்கள் பிரான்ஸை 10-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தனர். அந்த அணி இறுதிப் போட்டியில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்த போட்டியை இந்தியா 8–1 என்ற கோல் கணக்கில் வென்றது, இந்த முழு போட்டிகளிலும் இந்தியாவுக்கு எதிராக விழுந்தது ஒரே ஒரு கோலாகும், மேலும் இறுதிப் போட்டியில் மிகப்பெரிய வெற்றி வித்தியாசமாகவும் இப்போட்டி உள்ளது.
மூன்று தொடர்ச்சியான ஒலிம்பிக் பட்டங்களை வென்ற இந்திய ஹாக்கி அணி பெரும்பாலும் மிகப் பெரிய அணியாக கருதப்பட்டது.
இரண்டாம் உலகப் போர் காரணமாக 1940 மற்றும் 1944இல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவில்லை. இது உலக ஹாக்கியில் ஆதிக்கம் செலுத்திய அணியின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்தது. 1948 ஒலிம்பிக்கில் இந்தியா ஏ குழுவில் இடம்பிடித்தது. ஆஸ்திரியாவை 8-0, அர்ஜெண்டைனாவை 9-1, ஸ்பெயினை 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா கிரேட் பிரிட்டனை எதிர்கொண்டது, இந்தியா அவர்களை எதிர்கொண்டது இதுவே முதல் முறையாகும்.
கிரேட் பிரிட்டிஷ் அணி ஏற்கனவே 1908 மற்றும் 1920 ஆம் ஆண்டுகளில் தங்கப் பதக்கத்தை வென்றிருந்த அணியாகும். எனவே இந்த போட்டி சாம்பியன்ஸ்களுக்கிடையில் நடக்கும் ஒரு போராகக் கருதப்பட்டது. சுதந்திர இந்தியா, ஆதிக்க இங்கிலாந்தை எதிர்கொள்ளும் போட்டியானதால் உலகமே விளையாட்டைக் கவனித்தது. இறுதியில் இந்தியா 4-0 என்ற கணக்கில் வென்றது. இந்த வெற்றி இந்திய விளையாட்டுகளின் குறிப்பாக ஹாக்கியின் மிகப் பெரிய தருணமாகக் கருதப்படுகிறது.
1952 ஒலிம்பிக் மற்றும் 1956 ஒலிம்பிக்கில் இந்தியா மேலும் 2 தங்கப் பதக்கங்களை ஹாக்கியில் வென்றது, அந்த நேரத்தில் மிகவும் வெற்றிகரமான மற்றும் ஆதிக்கம் செலுத்திய அணி என்ற சாதனையைத் தக்கவைத்தது. 1952 ஒலிம்பிக் காலிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரியாவுக்கு எதிராக 4-0 என்ற கணக்கிலும், அரையிறுதியில் கிரேட் பிரிட்டனை 3–1 என்ற கணக்கிலும் வென்றது. மேலும் இறுதிப்போட்டியில் நெதர்லாந்தை 6–1 என்ற கணக்கில் வென்றது. இப்போட்டியில் பால்பீர் சிங் சீனியர் அடித்த ஐந்து கோல்கள் மிகவும் சிறப்பான செயலாக இன்றும் கருதப்படுகிறது. இது ஒரு ஒலிம்பிக் சாதனையாகும்.
1956 ஒலிம்பிக்கில் இந்தியா குழு ஆட்டங்களில் ஆப்கானிஸ்தானை 14–0, அமெரிக்கா 16–0, சிங்கப்பூரை 6–0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அரையிறுதியில் இந்தியா ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. இறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை எதிர்கொண்டு 1-0 என்ற கோல் கணக்கில் தோற்றது. இது ஹாக்கியில் மிகப்பெரிய திருப்புமுனையாகும்.
1964ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் இந்தியா ஹாங்காங், பெல்ஜியம், நெதர்லாந்து, மலேசியா, கனடா ஆகிய நாட்டு அணிகளைத் தோற்கடித்து, ஸ்பெயின், ஜெர்மனி அணிகளோடு சமன் செய்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் ஆஸ்திரியாவைத் தோற்கடித்து இறுதிப் போட்டியில் பாகிஸ்தானைச் சந்தித்தது. அந்த ஆண்டு தனது ஏழாவது தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது.
1964 ஆம் ஆண்டிற்குப் பின்னர்?. . . . நளைக் காணலாம்.