ஒரு பொருளை நாம் விலைக் கொடுத்து வாங்குகிறோம் என்றால் அது நமக்கு சொந்தமாகிறது. உதரணமாக காய்கறிகடையில் கத்திக்காய் வாங்குகிறார் ஒருவர் அதனை அவர் கூட்டாகவும் வைக்கலாம்,பொறியலோ,துவையலோ எது வேண்டுமானாலும் செய்யலாம். அல்லது தூர கூட வீசலாம். அவர் பணம் அவர் பொருள். நாம் கேள்வி ஒன்றும் கேட்க இயலாது. காசு கொடுத்து வாங்கிய பொருளானது அவருக்கு சொந்தமானது.இதை போல் ஒரு 30 ரூ கொடுத்து வாங்கிய கத்திரிக்காய் போன்ற பொருளே இவ்வாறு என்றால் 30,00,000 லட்சம் கொடுத்து வாங்கிய பொருள் பற்றியும், வாங்கியவருக்கு அதன் மீதுள்ள உரிமை பற்றியும் நாம் சொல்ல தேவையில்லை.ஒரு பெண், 3000000 லட்சம் கொடுத்து வாங்கிய என் கணவரை நான் துணிதுவை,சமையல் செய், பாத்திரம் கழுவு என சொல்வதில் என்ன தவறு எனக் கேட்டுள்ளார்.வரதட்சணை வாங்கி பெண்ணை திருமணம் செய்யும் ஆண்களுக்கு இது ஒரு மூக்கு உடைப்பாக இருக்கும். இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைதளங்களில் வலம் வருகிறது.