![]()
செவ்வாயின் சுற்று வட்டத்தில் மங்கள்யான்… வண்ணப் படம் அனுப்பி வாழ்த்தைப் பெற்றது! சிவந்து தெரிந்த படம்… உமிழ்நீராய் உருவமிலா உருவகம்! நான் உன் செவ்வாயின் சுற்று வட்டத்தில் மங்களனாய்..! எண்ணப் பதிவு அனுப்பி எதிர்பார்த்துக் கிடந்தேன்! சிவந்து தெரிந்த சாயம்… உமிழ்நீர் சுரந்து உதடெல்லாம் மின்னும்! தாரகையாய் மின்னிய ஒளியில் தானாகவே மதி கரைந்து கவிப்பா புனையும்! தவிப்பாய்த் தவிக்கும்! செவ்வாயின் வெற்றிச் சங்கதியை செவ்வாய் திறந்து சொல்லத்தான்… உதட்டுச் சாயத்தை உரு ஏற்றினாயோ? ஆனால் பெண்ணே… உன் உதட்டுச் சாயத்தின் சிவப்பு.. என் உள்ளக் காயத்தின் தகிப்பு ! உன் உதட்டுச் சாயத்தின் வண்ண அளவு கூடுகிறது… என் உள்ளக் காயத்தின் வலி அளவும்தான்!