நெல்லை: இந்தியாவிலேயே தமிழகத்தில் உயர்கல்விக்கான மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்று கூறினார் அமைச்சர் அன்பழகன்.
நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் உயர்கல்விதுறை அமைச்சர் அன்பழகன். அப்போது அவர், பொறியியல் கல்லூரிக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடந்து வருகிறது.செப்.1 ம் தேதி பொறியியல் படிப்புக்கான வகுப்புகள் துவங்கும். 506 பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடந்து வருகிறது என்று கூறினார்.