கரூர்: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கஜா புயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் என்றும், நடைபெறவுள்ள நாடாமன்ற கூட்ட தொடரில் இதுபற்றி குரல் எழுப்பப்படும் என்று கரூரில் மக்களவை துணை சபாநாயகர் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்தார்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு கிராம பகுதிகளுக்கு மக்களவை துணை சபாநாயகர் மு.தம்பிதுரை, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பல்வேறு அரச துறை சேர்ந்தவர்களுடன் கிராமங்களில் உள்ள பொது மக்களிடம் நேரடியாக சென்ற கோரிக்கை மனு பெற்று வருகிறார். இன்று கரூர் மாவட்டம் புன்செய்தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட மூர்த்திபாளையம், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று கோரிக்கை மனு பெற்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, கஜா புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, குறிப்பாக நாகை, தஞ்சை, புதுகோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் தென்னை மரங்கள், முந்திரி மரங்கள் உள்ளிட்டவை வேரோடு சாய்ந்து விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். திருச்சி, திண்டுக்கல்,கரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கஜாபுயல் பாதிப்பை மத்திய அரசு தேசிய பேரிடையாக அறிவிக்க வேண்டும் அப்போதுதான் உரிய நிவாரணம் கிடைக்கும்.
பாதிக்கப்பட்ட பகுதிகளை சீர் செய்ய வேண்டும் என்றால் பலநாட்கள் ஆகும் நிலை உள்ளது. மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த கேட்கவுள்ளோம்..
வரும் 11 ம் தேதி நாடாளுமன்றம் நடைபெறவுள்ள அ.தி.மு.க., சார்ந்த் எம்.பிக்கள் இது தொடர்பாக குரல் கொடுத்து காவிரி பிரச்சனையை எவ்வாறு தீர்வு சரிசெய்தோமோ அதே போல் கஜா புயல் நிவாரணத்துக்கும் குரல் கொடுப்போம்.
தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்த பின்னர் இந்த ஆய்வு குழு அமைக்கப்பட்டள்ளது. ஆய்வு செய்த குழுவினர் இந்த புயலால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இது போல் ஒரு புயல் தாக்கம் ஏற்பட்டது இல்லை என்றார் மு.தம்பிதுரை!
இதனிடையே, 10 வருடங்களாகவே நீங்கள் மனுக்கள் தான் பெற்று வருகின்றீர்கள் என்று அங்கிருந்த மக்கள் சிலர் கூறிய போது, ஒரு எம்.பி யிடம் வேறு என்ன இருக்கின்றது? எல்லாம் அரசு தான் செய்ய வேண்டும் என்று அசாதாரணமாகக் கூறி, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.