பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் 01.12.2018 முதல் திருநெல்வேலி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே மதுரை பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே மதுரை பிரிவு வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, தற்போது பாலக்காடு – புனலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இயக்கப்படும் வண்டி எண் 16791/16792 திருநெல்வேலி – பாலக்காடு – திருநெல்வேலி பாலருவி விரைவு ரயில் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் இரு மார்க்கங்களிலும் திருநெல்வேலி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.