― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்சோலைமலை முருகன் கோயிலில் ஜூன் 4ல் மகா அபிஷேகம்: உதவி ஆணையர் தகவல்!

சோலைமலை முருகன் கோயிலில் ஜூன் 4ல் மகா அபிஷேகம்: உதவி ஆணையர் தகவல்!

pazhamuthirsolai

மதுரை: மதுரை அழகர்கோயில் மலையில் உள்ள சோலைமலை முருகன் கோயிலில் ஜூன்4-ம் தேதி வைகாசி விசாக நட்தத்திரத்தன்று காலை 11 மணிக்கு சண்முகருக்கு மகா அபிஷெகம் நடைபெறும் என, கோயில் செயல் அலுவலரும் உதவி ஆணையாளருமான அனிதா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியது: சோலைமலை முருகன் கோயிலில் வைகாசி திருவிழா இன்று தொடங்கி ஜூன் 4-ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவையொட்டி, தினசரி காலை 11 மணிக்கு சண்முக அர்ச்சணையும், மாலை 6 மணிக்கு தீபாராதனையும் நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

இதேபோல், மதுரை கள்ளழகர் திருக்கோயில் அழகர் கோயிலில், வைகாசி வசந்த உற்சவமானது, மே 27-ஆம் தேதி தொடங்கி, ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதையொட்டி, இக் கோயில் வளாகத்தில் வசந்த உற்சவம், தினசரி மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். ஜூன் 1ஆம் தேதி முதல் அரசு வழிகாட்டுதலின்படி நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Exit mobile version